முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதலை செய்யக்கோரிய நளினி வழக்கை நவ. 11-க்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்

வியாழக்கிழமை, 3 நவம்பர் 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்யக் கோரிய வழக்கை நவ.11 ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நளினி உள்ளிட்ட 6 பேர் சிறையில் உள்ளனர். சுப்ரீம் கோர்ட் கடந்த மே 18-ம் தேதி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது. பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து மற்ற 6 பேரும் விடுதலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு நவ.11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அமைச்சரவை தீா்மானத்தின் மீது கவர்னர் முடிவெடுப்பதில் தாமதம் செய்ததாகக் கூறி அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின் கீழ் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் கடந்த மே மாதம் உத்தரவிட்டது.

இதனிடையே, சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மற்ற ஆறு பேரில் ரவிச்சந்திரன், நளினி ஆகிய இருவரும் தங்களையும் இதே காரணத்திற்காக சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்றம், இது போன்று ஏற்கெனவே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருப்பதாலும், பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவித்தது போன்ற அதிகாரம் உயா்நீதிமன்றத்திற்கு இல்லை என்றும் கூறி அந்த மனுக்களை தள்ளுபடி செய்து கடந்த ஜூன் 17-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகியோர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளித்துள்ள நிலையில், மத்திய அரசுக்கும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பபட்டிருந்தது. இந்நிலையில், நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்யக் கோரிய வழக்கை நவ.11 ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து