முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் ஆயுத உதவி: அமெரிக்கா

சனிக்கிழமை, 5 நவம்பர் 2022      உலகம்
America 2022-11-05

Source: provided

வாஷிங்டன் : உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் ராணுவ ஆயுத உதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் 8 மாதத்தைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர்கள் ராணுவ ஆயுத உதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

ராக்கெட் ஏவுகணை ஆயுதங்கள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் ராணுவ ஆயுத உதவியின் கீழ் உக்ரைனுக்கு வழங்கப்படுகிறது. ரஷ்யாவும், ரஷ்யப் படைகளும் இந்த நாட்டின் குடிமக்களின் உள்கட்டமைப்பு மீது ஏவுகணைகள் மற்றும் ஈரானிய ஆளில்லா விமானங்களை பொழியும் இந்த இக்கட்டான தருணத்தில் வான் பாதுகாப்பின் தீவிரத் தேவையை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கீவ்வில் செய்தியாளர்களிடம் கூறினார். ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவியாக இதுவரை 15 பில்லியனுக்கும் அதிகமான ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து