முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-ம் சார்லஸ் முடி சூட்டு விழாவை முன்னிட்டு மே 8-ம் தேதி வங்கி விடுமுறை நாளாக இங்கிலாந்து அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 6 நவம்பர் 2022      உலகம்
Charles 2022-11-06

Source: provided

லண்டன் : அரசர் மூன்றாம் சார்லசின் முடி சூட்டு விழாவை முன்னிட்டு, அவரை கவுரவிக்கும் வகையில் வரும் மே மாதம் 8-ம் தேதியை வங்கி விடுமுறை நாளாக அரசு அறிவித்து உள்ளது. 

இங்கிலாந்தில் நீண்ட காலம் ராணியாக இருந்த ராணி 2-ம் எலிசபெத் கடந்த செப்டம்பர் மாதம் 8-ம் தேதி தனது 96 வயதில் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து 2 நாட்களுக்கு பின் அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக ஆனார். இந்த சூழலில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு (2023) மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்து உள்ளது. 

அரசர் மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு அவருக்கு கவுரவம் சேர்க்கும் வகையில், மே 8-ம் தேதி வங்கி விடுமுறையாக இருக்கும் என இங்கிலாந்து அரசு அறிவித்து உள்ளது.

இதுபற்றி இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தியில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அரசர் மூன்றாம் சார்லசின் முடி சூட்டு விழாவை முன்னிட்டு கூடுதலாக வங்கி விடுமுறை நாளை அறிவிக்க பிரதமர் முடிவு செய்துள்ளார். இதன்படி, மே 6-ம் தேதி சனிக்கிழமை முடி சூட்டு விழாவை தொடர்ந்து, மே 8-ம் தேதி திங்கட்கிழமை வங்கி விடுமுறையாக இருக்கும் என தெரிவித்து உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து