முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை.யில் பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை தொடங்குகிறது

ஞாயிற்றுக்கிழமை, 6 நவம்பர் 2022      ஆன்மிகம்
Thiruvannamalai 2022-11-06

Source: provided

தி.மலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றியுள்ள சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். 

இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று 7-ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 4.44 மணிக்கு தொடங்கி நாளை 8-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4.48 மணிக்கு நிறைவடைகின்றது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர். பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து