முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவிலிருந்து வெளியேறிய ஆப்பிள் ஐபோன் நிறுவனம்

திங்கட்கிழமை, 7 நவம்பர் 2022      உலகம்
Apple-iPhone 2022-11-07

Source: provided

பெய்ஜிங் : சீனாவில் ஆப்பிள் ஐபோன்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் ஆலையில் இருந்து, ஏராளமான தொழிலாளர்கள் கொரோனா அச்சம் காரணமாக தப்பிச் சென்றனர். இதனை அடுத்து  உற்பத்தி பாதிப்பு காரணமாக ஐபோன் நிறுவனம் அங்கிருந்து வெளியேறியுள்ளது.

சீனாவின் செங்சூ நகரில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக, அங்கு மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஆப்பிள் ஐபோன்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் ஆலையில் இருந்து, ஏராளமான தொழிலாளர்கள் கொரோனா அச்சம் காரணமாக தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆப்பிள் நிறுவனம், பாக்ஸ்கான் ஆலையில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 3 ஆயிரம் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஐபோன்கள் உற்பத்தி குறைந்து விட்டதாகவும், ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து