முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இம்ரான்கான் தலைமையிலான பேரணி மீண்டும் ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 8 நவம்பர் 2022      உலகம்
Imran-Khan 2022--09-30

பாகிஸ்தானில் இம்ரான்கானின் பேரணி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று பேரணி தொடங்கவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த வியாழக்கிழமை அன்று பஞ்சாப் மாகாணத்தின் வாஜிராபாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றிருந்த போது, அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அவருக்கு வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் நலமாக இருப்பதாக சிகிச்சை அளித்து வரும் டாக்டர் பைசல் சுல்தான் தெரிவித்தார். எனினும் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார். 

இந்நிலையில், நான் சுடப்பட்ட அதே இடத்திலிருந்து வரும் செவ்வாய்கிழமை(இன்று) அன்று மீண்டும் பேரணி தொடரும் என்று இம்ரான் கான் கூறினார். இதனிடையே, இன்று முதல் மீண்டும் தொடங்க இருந்த இம்ரான் கான் கட்சியினரின் பேரணி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் வியாழக்கிழமை முதல் மீண்டும் பேரணி தொடரும் என்று இம்ரான் கானின் பி.டி.ஐ. கட்சி தலைவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து