முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்த உலகின் உயரமான பெண்

செவ்வாய்க்கிழமை, 8 நவம்பர் 2022      உலகம்
Rumesa-Kelki 2022-11-08

உலகின் உயரமான பெண்ணாக அறியப்படும் ருமேசா கெல்கி முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்துள்ளார். 

உலகின் உயரமான பெண்ணாக துருக்கியின் ருமேசா கெல்கி அறியப்படுகிறார் .இவரது உயரம் 7 அடி 7 அங்குலமாகும். தனது உயரம் காரணமாக ருமேசா வெளிநாடுகளுக்கு பயணம் செய்யாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், துருக்கியை சேர்ந்த விமான நிறுவனம் ஒன்று ருமேசா கெல்கிக்காக தங்களது விமானத்தில் மாற்றம் செய்து ஆறு இருக்கைகள் இருந்த இடத்தில் படுக்கை ஒன்றை அமைத்து ருமேசா கெல்கியை விமானத்தில் பயணம் செய்ய வைத்திருக்கிறது. 

இதன் மூலம், 13 நேர பயணத்திற்குப் பிறகு துருக்கியிலிருந்து அமெரிக்காவுக்கு ருமேசா கெல்கி சென்றடைந்திருக்கிறார். தனது முதல் விமானப் பயணம் குறித்து ருமேசா கெல்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 

ஆரம்பம் முதல் முடிவு வரை குறையற்ற பயணமாக இது அமைந்தது. இது எனது முதல் விமானம், ஆனால், இது நிச்சயமாக கடைசி விமானப் பயணமாக இருக்காது என்று பதிவிட்டுள்ளார். 25 வயதான ருமேசா கெல்கி அமெரிக்காவில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரியவுள்ளார். தனது வேலைக்காக இந்தப் பயணத்தை ருமேசா கெல்கி மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து