முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 தமிழக மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்

புதன்கிழமை, 9 நவம்பர் 2022      உலகம்
fisher-man- 2022 08 04

Source: provided

கொழும்பு, : தமிழக மீனவர்கள் 7 பேரை விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 ராமேசுவரத்தில் இருந்து கடந்த 27-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களான கிளிண்டன், வினிஸ்டன், அயான், மரியான், தானி, ஆனஸ்ட், பேதுகை ஆகிய 7 பேரை எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை விசைப்படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. அதை தொடர்ந்து ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்த வழக்கு ஊர்க்காவல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 7 மீனவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, இனிமேல் எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கக் கூடாது என்று எச்சரிக்கை செய்து அவர்களை விடுதலை செய்ததோடு, விசைப்படகு உரிமையாளர் மைக்கேல்ராஜ் உரிய ஆவணங்களுடன் ஜனவரி மாதம் 9-ம் தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் ஒரு வாரத்திற்குள் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து