முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து வாக்குசாவடியிலும் பா.ஜ.க. வெற்றியை உறுதி செய்ய வேண்டும்

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2022      இந்தியா
Modi 2022-11-19

Source: provided

குஜராத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம்

அகமதாபாத் ; ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று நேற்று குஜராத்தின் சோம்நாத் மாவட்டம் வெராவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். 

 182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. குஜராத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக பா.ஜ.க.  தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு அங்கு ஆட்சியை பிடிக்கும் வேட்கையில் காங்கிரஸ் உள்ளது. ஆம் ஆத்மி 3-வது அணியாக களத்தில் குதித்துள்ளது. 

பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 6-ம் தேதி பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினார். அதை தொடர்ந்து பிரதமர் மோடி 2-வது முறையாக குஜராத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு குஜராத் சென்ற பிரதமர் மோடி, வல்சாத் மாவட்டம் ஜூவா சராபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். தொடர்ந்து குஜராத்தில் பிரதமர் மோடி நேற்று 2-வது நாளாக பிரச்சாரம் செய்தார். 

நேற்று காலை புகழ் பெற்ற சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி பூஜையில் ஈடுபட்டு பிரார்த்தனை செய்த பிறகு தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.  சோம்நாத் மாவட்டம் வெராவில் நடந்த பொதுக் கூட்டத்தில் மோடி பேசுகையில், 

 வாக்குப்பதிவு நாளில் மக்கள் அதிக அளவில் சென்று ஓட்டு போட வேண்டும். முந்தைய வாக்குப்பதிவு சாதனையை முறியடிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இங்குள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பா.ஜ.க. வெற்றியை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து