முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் 406 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2022      இந்தியா
India-Corona 2022 03 15

Source: provided

புதுடெல்லி : நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 406 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 12 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.  அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 406 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,46,69,421 ஆக உள்ளது. மேலும் கேரளத்தில் 11 பேர் உள்பட மொத்த 12 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,30,586 ஆக உயர்ந்துள்ளது.  நாட்டில் இதுவரை தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,31,171ஆக பதிவாகியுள்ளது.

அதேவேளையில், நாட்டில் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6,402 ஆகக் குறைந்துள்ளது.  நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 219.86 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து