முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 208 பேருக்கு பணி நியமன ஆணைகள்: மத்திய அமைச்சர் எல்.முருகன் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2022      தமிழகம்
Murugan 2022 11 22

சென்னை ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எப். மைதானத்தில் நடைபெற்ற விழாவில் 208 பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய அமைச்சர் எல். முருகன் வழங்கினார். 

மத்திய அரசில் ஒரு ஆண்டில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாடு முழுவதும் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 2-வது கட்டமாக நேற்று நாடு முழுவதும் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமனங்களை பிரதமர் மோடி வழங்கினார். டெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அதே நேரத்தில் இதர மாநிலங்களில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டு வழங்கினர். 

சென்னை ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எப். மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் தபால்துறை, மருத்துவ துறை, வங்கி பி.எஸ்.எப். உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 208 பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய அமைச்சர் எல்.முருகன் வழங்கினார். இதில் சி.ஆர்.பி.எப். துறையின் டி.ஐ.ஜி. தினகரன் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து