முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐகோர்ட் மதுரை கிளையில் சுவாதி மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2022      தமிழகம்
madurai--high-court2022-08--11

Source: provided

மதுரை : ஐகோர்ட் மதுரைக் கிளையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட சுவாதியிடம், நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், திடீரென சுவாதி மயங்கி விழுந்தார். உடனடியாக நீதிமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி, ஐகோர்ட் மதுரைக் கிளைக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிபதிகள் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.  கோகுல்ராஜ் கொலை வழக்குத் தொடர்பாக நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை சுவாதியிடம் எழுப்பி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 

கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையில் வாக்குமூலம் பெறப்பட்டுக் கொண்டிருந்த போது இடையே 15 நிமிட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விசாரணை தொடங்கியது. கோல்குல்ராஜ் பற்றியும், கொலை நடந்தது பற்றியும் அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதி எழுப்பினார். இந்த நிலையில், விசாரணையின் போது சுவாதி திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து