முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12 மாவட்ட சிறைகளில் கட்டப்பட்ட அடையாள அணிவகுப்பு அறைகளுக்கான கட்டிடங்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2022      தமிழகம்
CM-2 2022 11 25

சென்னை தலைமைச் செயலகத்தில், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் 2 கோடியே 51 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் செலவில் 12 மாவட்ட சிறைகளில் கட்டப்பட்டுள்ள சோதனை அடையாள அணிவகுப்பு அறைகளுக்கான கட்டிடங்களை நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழகத்தில் குற்றம் இழைத்து சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறைவாசிகளின் மீதான குற்றத்தினை சாட்சிகள் வாயிலாக நிரூபித்திடும் வகையில் காவல்துறையின் சார்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காட்டிட, மத்திய  சிறைகளில், நீதித்துறை நடுவர் மற்றும் குற்றச்செயலால் பாதிக்கப்பட்டோர் ஒரு பகுதியிலும், அவர்களை  குற்றவாளிகள் அடையாளம் காணாத வகையில் மற்றொரு பகுதியிலும் இருக்கும் வகையில் ஒருவழிக்கண்ணாடி  தடுப்புடன் கூடிய தனி அறைகள் அனைத்து மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் தனிச்சிறைகளில் கட்டப்பட்டு இயங்கி வருகின்றன. அதனைத் தொடர்ந்து, 13 மாவட்ட சிறைகளில் இத்திட்டத்தினை  செயல்படுத்திட அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டம், பேரூரணி, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், விருதுநகர் மாவட்டம், விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டம்,  இராமநாதபுரம், சேலம் மாவட்டம், ஆத்தூர், நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம்,  விழுப்புரம் மாவட்டம், வேடம்பட்டு, தேனி மாவட்டம்,  தேனி, திருப்பூர் மாவட்டம், திருப்பூர், தருமபுரி மாவட்டம், தருமபுரி மற்றும் ஈரோடு மாவட்டம்,  கோபிசெட்டிப்பாளையம் ஆகிய 12 மாவட்டச் சிறைகளில் கட்டப்பட்டுள்ள சோதனை அடையாள அணிவகுப்பு அறைகளுக்கான கட்டிடங்களை முதல்வர் நேற்று திறந்து வைத்தார். இத்திட்டம் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தின் மாவட்டச் சிறைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து