முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அச்சம்

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      இந்தியா
Andhra 2022-11-27

Source: provided

ஐதராபாத் ; ஆந்திராவில் ஹவுரா புறப்பட்டு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். 

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து ஹவுராவுக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநிலம் குப்பம் சென்ற போது நேற்று திடீரென தீப்பிடித்தது. ரயில் பெட்டியில் தீப்பிடித்தவுடன் புகை கிளம்பியதை கண்ட பயணிகள் அலறியடி கூச்சலிட்டனர்.  அதை தொடர்ந்து குப்பம் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்ட பின் பயணிகள் இறங்கி தங்கள் உடைமைகளுடன் முண்டியடித்து ஓட்டம் பிடித்தனர். 

தீப்பிடித்த ரயில் பெட்டியில் இருந்தவர்களை போலீசார் வெளியேறியதால் பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். உடனடியாக ரயில் பெட்டியில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து