முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நொய்யல் நீர்த்தேக்கத்தில் இருந்து டிச. 7 முதல் நீர் திறக்க அரசு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

கரூர் மாவட்டம் நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்தேக்கத்தில் இருந்து டிச. 7 முதல் 40 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து நீர்வளத்துறை, அரசு கூடுதல் தலைமை செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து நொய்யல் கால்வாயிலுள்ள பாசனப் பகுதிகளுக்கு 07.12.2022 முதல் 04.02.2023 வரை 40 நாட்களுக்கு 276.480 மில்லியன் கன அடிக்கு மிகாமல் சிறப்பு நனைப்பிற்கு தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், கரூர் மாவட்டம், புகளூர் மற்றும் மண்மங்கலம் வட்டங்களிலுள்ள 19480 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து