முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் தலைமுறை வாக்காளர்கள் ஜனநாயக கடமையை ஆற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2022      இந்தியா
Modi-2022-12-01

முதல் தலைமுறை வாக்காளர்கள் ஜனநாயக கடைமையை ஆற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குஜராத்தில் நேற்று முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. முன்னதாக 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

குஜராத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்களிக்கும் அனைவரையும், குறிப்பாக முதல் முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பதிவு எண்ணிக்கையில் பயன்படுத்துமாறு அழைக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து