முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே. வங்கத்தில் திரிணாமுல் காங். நிர்வாகி வீட்டில் குண்டுவீச்சு: தாக்குதலில் 3 பேர் உயிரிழப்பு

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2022      இந்தியா
Trinamool Congress 2022 12 03

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி வீடு மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மெதினிப்பூர் உள்ள பூபதி நகரில் நேற்று முன்தினம் இரவு இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளது. நாட்டு வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் திரிணாமுல் காங்கிரஸ் பூத் கமிட்டி தலைவர் ராஜ்குமார் மன்னாவுக்கு சொந்தமான கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. இந்த  தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

திரிணாமுல் காங்கிரஸ் தேசிய செயலாளர் அபிஷேக் பேனர்ஜி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு சற்று முன்னர் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து