முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோயிலில் ஜனாதிபதி திரெளபதி முர்மு சாமி தரிசனம்

திங்கட்கிழமை, 5 டிசம்பர் 2022      இந்தியா
Murmu 2022 12 05

Source: provided

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி திரெளபதி முர்மு நேற்று சாமி தரிசனம் செய்தார். மகா துவாரம் வழியாக தரிசனத்திற்கு சென்ற அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜனாதிபதி திரெளபதி முர்மு விசாகப்பட்டினத்தில் இருந்து விமான மூலம் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். ஆந்திர கவர்னர் விஸ்வ பூஷன் அரிச்சந்திரன் ஆந்திர துணை முதல்வர் நாராயணசாமி மத்திய அமைச்சர் கிருஷ்ணன் ரெட்டி, கலெக்டர் வெங்கட்ரமண ரெட்டி, எஸ்.பி பரமேஸ்வர ரெட்டி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர். இதையடுத்து திருப்பதி வந்த ஜனாதிபதி பத்மாவதி கெஸ்ட் ஹவுஸில் தங்கினார்.

நேற்று காலை 9.25 மணிக்கு வராஹ சாமி கோவிலிலும், பின்னர் 9.30 மணிக்கு ஏழுமலையானையும் தரிசனம் செய்தார். மகா துவாரம் வழியாக தரிசனத்திற்கு சென்ற அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டி அவருக்கு லட்டு, தீர்த்த பிரசாதங்களை வழங்கினார். 

அதைத் தொடர்ந்து அலிப்பிரியில் உள்ள கோசாலையில் நடத்த கோ மந்திர பூஜையில் கலந்து கொண்டார். இதையடுத்து திருப்பதியில் உள்ள மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்சியில் கலந்து கொண்டு மாணவிகளிடம் உரையாடினார். ஜனாதிபதி வருகையையொட்டி திருப்பதி முழுவதும் 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து