முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில அந்தஸ்து கோரி புதுவையில் நடந்த முழு அடைப்பு போராட்டம் : பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் அவதி

புதன்கிழமை, 28 டிசம்பர் 2022      இந்தியா
Puducherry-2022-12-23

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி நேற்று கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தனியார் பேருந்துகள் இயங்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

புதுவை மாநிலத்துக்கு மாநில அந்தஸ்து கோரி நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. அறிவித்திருந்தது.

இதற்கு வணிகா்கள் சங்க கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்பு அளிக்கக் கோரி காவல்துறையினரிடம் மனு அளித்திருந்தனர். இந்நிலையில், புதுவையில் காலை முதல் பல இடங்களில் கடைகள் திறக்கப்படவில்லை. தனியார் பேருந்துகள் இயங்காததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் தமிழக அரசுப் பேருந்துகள் அனைத்தும் புதுவை எல்லையான மதகடிபட்டி வரை மட்டுமே இயக்கப்பட்டதால் பயணிகள் தவிப்பிற்குள்ளாகினர்.

மேலும், அரசுப் பேருந்துகள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது.  திறக்கப்பட்டு இருந்த கடைகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர்.  இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு மாநிலச் செயலா் அன்பழகன் உள்பட 15 அ.தி.மு.க. நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து