முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானும் இந்தியாவும் அணு ஆயுத போரை நடத்த தயாராகின: அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் தகவல்

புதன்கிழமை, 25 ஜனவரி 2023      உலகம்
Mike-Pompeo 2023 01 25

பாகிஸ்தானும் இந்தியாவும் கடந்த 2019-ம் ஆண்டு அணு ஆயுத போரை நடத்த இருந்ததாக அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்த போது அந்நாட்டின் வெளியுறவு அமைச்சராக 2018 முதல் 2021 வரை இருந்தவர் மைக் பாம்பியோ. தனது அனுபவங்கள் தொடர்பாக இவர் எழுதி சமீபத்தில் வெளியான புத்தகத்தில், கடந்த 2019-ம் ஆண்டு பாகிஸ்தானும் இந்தியாவும் அணுஆயுத தாக்குதல் நடத்த இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு, ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த துணை ராணுவப் படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் முகாம் மீது இந்திய ராணுவம் வான் தாக்குதல் நடத்தி அழித்தது. இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது.

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு எழுதியுள்ள மைக் பாம்பியோ, கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் பாகிஸ்தானும் இந்தியாவும் அணுஆயுத போரை நடத்த இருந்த விவகாரம் உலகிற்கு எந்த அளவுக்குத் தெரியும் என்பது எனக்குத் தெரியாது. 

ஆனால், இந்த இரு நாடுகளும் அணுஆயுத போருக்கு நெருங்கின. அது எனக்கு நன்கு தெரியும். அப்போது நான் வியட்னாமின் ஹனோய் நகரில் இருந்தேன். பாகிஸ்தானின் தளர்வான பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை காரணமாக 40 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். 

இதற்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தியது. அப்போது பாகிஸ்தானியர்கள் இந்திய ராணுவ விமானத்தை துப்பாக்கியால் சுட்டனர். இதில், இந்திய விமானி பிடிபட்டார். 

உடனடியாக நான் இந்திய வெளியுறவு அமைச்சரிடம் பேசினேன். அப்போது அவர், இந்தியா மீது பாகிஸ்தான் அணுஆயுத தாக்குதல் நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்றும், எனவே, இந்தியா தனக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறது என்றும் குறிப்பிட்டார். 

அப்போது நான், எதையும் செய்து விடாதீர்கள். எனக்கு ஒரு நிமிடம் மட்டும் தாருங்கள் என்று கூறி விட்டு, உடனடியாக பாகிஸ்தானின் உண்மையான தலைவராக இருந்த கமர் ஜாவெத்(ராணுவ தலைமை தளபதி) இடம் பேசி இந்திய வெளியறவு அமைச்சர் கூறியதை அவரிடம் தெரிவித்தேன். அப்போது அவர் அது உண்மை அல்ல என தெரிவித்தார். 

அதோடு, இந்தியாதான் பாகிஸ்தான் மீது அணுஆயுத போரை நடத்த தயாராகி வருவதாகவும் அவர் புகார் தெரிவித்தார். இரு நாடுகளுமே மற்றொரு நாட்டுக்கு எதிராக அணுஆயுத போரை நடத்தும் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்பதை புரிய வைக்க எனக்கு சில மணி நேரம் தேவைப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து