முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரசில் இருந்து விலகினார் ஏ.கே.அந்தோணியின் மகன்

புதன்கிழமை, 25 ஜனவரி 2023      இந்தியா
Anil-Anthony 2023 01 25

Source: provided

புதுடெல்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் கே அந்தோணி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பிரதமர் மோடி குறித்த பிபிசி-யின் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்திற்கு எதிராக நேற்று கருத்து தெரிவித்திருந்த நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதுகுறித்து அனில் அந்தோணி நேற்று (புதன்கிழமை) வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "காங்கிரஸ் கட்சியில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் நான் வகித்துவந்த அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்.

கருத்துச் சுதந்திரத்திற்காக போராடுபவர்கள் எனது ட்வீட்டை திரும்பப் பெறும்படி கூறினர். நான் மறுத்துவிட்டேன். அன்பு பரப்பப்படுவதை ஆதரிப்பவர்களின் முகநூல் பக்கங்கள் வெறுப்பும் துஷ்பிரயோகமுமாக இருக்கிறது.

இதற்குப் பெயர் பாசங்கு. வாழ்க்கை பயணப்பட்டுக்கொண்டே இருக்கும்." என்று தெரிவித்துள்ளார். அத்துடன் தனது ராஜினமா கடிதத்தையும் இணைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து