முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2023      தமிழகம்
EPS 2022 12 21

Source: provided

சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ந்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு போட்டியிடம் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் கீழ்கண்டவர்களும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

கழக அமைப்பு செயலாளர், முன்னாள் எம்.பி, டாக்டர் கே.கோபால், கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.வளர்மதி மற்றும் அமைப்பு செயலாளர்கள் முன்னாள் எம்.பி. ரத்தினவேல், முன்னாள் எம்.எல்.ஏ. ஆசைத்தம்பி, சிவா. ராஜமாணிக்கம், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து