முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி-20 மாநாடு பிரதிநிகள் வருகை: மாமல்லபுரத்தில் பலத்த பாதுகாப்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2023      தமிழகம்
G20-Summit 2023 01 28

Source: provided

செங்கல்பட்டு : ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள், வரும் பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்திற்கு வருகை தர உள்ளனர். இதையொட்டி மாமல்லபுரத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

ஜி-20 உச்சிமாநாடு இன்று 31 மற்றும் பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் மற்றும் கன்னிமாரா நட்சத்திர ஓட்டல், கிண்டி ஐ.ஐ.டி ஆகிய இடங்களில் நடக்கிறது. இந்த மாநட்டில் 20 நாடுகளைச் சேர்ந்த 150 விருந்தினர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். 

மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள், பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து, கண்டுகளிக்க செல்லவுள்ளனர். இதனை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணை உருண்டை பாறை, கடற்கரை கோயில், ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களில் அதன் நுழைவு வாயில் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் உடைமைகள், பைகள், உணவுப்பொருட்கள் என அனைத்தையும் தீவிரமாக பரிசோதித்த பிறகே புராாதன சின்னங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து