முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரு நாட்டில் கன மழையால் நிலச்சரிவு - 35 பேர் உயிரிழப்பு

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2023      உலகம்
Peru 2023 02 07

Source: provided

லிமா : பெரு நாட்டில் கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு 35 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

தென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த மழை பெய்துவருகிறது. அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இடைவிடாமல் கொட்டும் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் பலர் சிக்கியுள்ளனர்.

வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 35 பேர் பலியாகி உள்ளனர். கமனா மாகாணத்தில் உள்ள மரியானோ நிக்கோலாஸ் பகுதியில் பலரது உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பலத்த மழையால் சாலைகள், பாலங்கள், வீடுகள் சேதமடைந்துள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப்பணி நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து