முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகள் மறுவரையறை எப்போது? பார்லி.யில் மத்திய அரசு பதில்

வியாழக்கிழமை, 23 மார்ச் 2023      இந்தியா
Parlie2023-03-23

Source: provided

புதுடெல்லி: 2026-ம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் உள்ள பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படலாம் என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

நாட்டில் உள்ள பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படுவது வழக்கம். அந்த அடிப்படையில், 2008-ம் ஆண்டு பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத்தில் உள்ள தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டன. 2008-ம் ஆண்டு தொகுதிகள் மறுவரையறை செய்யும் போது பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்தும், தொகுதிகளை மறுவரையறை செய்யும் போது மாநிலங்களுக்கான பங்கு என்ன என்றும், அடுத்த தொகுதி மறுவரையறை எப்போது செய்யப்படும் என்றும் பாரதிய ஜனதா கட்சியை சேந்த ஜி.வி.நரசிம்ம ராவ் என்பவர் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த கேள்விக்கு மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக பதிலளித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரி.ஜி.ஜூ: தொகுதிகள் மறுவரையறையில் மாநிலங்களுக்கு எந்த விதமான பங்கும் இல்லை என தெரிவித்துள்ளார். அடுத்த மறுவரையறை 2026-ம் ஆண்டுக்கு பின்னர் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படலாம் என சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து