முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2023      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2023-01

Source: provided

சென்னை : சனி, ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. 

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 9-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, சில நாட்கள் பேரவை நடைபெற்றது. அதை தொடர்ந்து தமிழக அரசின் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் பேரவையில் கடந்த 20-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதை மின்னணு வடிவில் (‘இ-பட்ஜெட்’) நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். 

அதற்கு மறுநாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மீதான விவாதம் தினமும் நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில் சனி, ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஒரு மணி நேரம் கேள்வி, பதில் எடுத்துக் கொள்ளப்படும். எம்.எல்.ஏ.க்கள் கேட்கும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். 

அதன்பிறகு முக்கிய சம்பவங்களை கவன ஈர்ப்பு தீர்மானமாக கொண்டு வந்து எம்.எல்.ஏ.க்கள் பேசுவார்கள். இதற்கும் அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். 

இதன்பிறகு பட்ஜெட் மீதான 3-ம் நாள் பொது விவாதம் தொடங்கும். தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசுவார்கள். இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் குறுக்கிட்டு பதில் அளிப்பார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து