முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை ராஜஸ்தான் வெல்லும்: பான்டிங்

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2023      விளையாட்டு
Ricky-Ponting 2023 03 31

Source: provided

ஐசிசி ரிவ்யூவின் சமீபத்திய நிகழ்ச்சியில் பேசிய பான்டிங், இந்த சீசனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று கருதும் அணியைத் தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆஸ்திரேலிய ஜாம்பவான் குஜராத் டைட்டன்ஸுடன் தொடங்கினார், ஆனால் அவரது கவனம் 2008 சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் மீது இருந்தது. அவர்கள் கடந்த ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியபோது தங்கள் 14 ஆண்டுகால சாதனையை அதாவது கோப்பையை மீண்டும் வெல்லும் கனவுக்கு அருகில் வந்தனர்.

“கடந்த ஆண்டு குஜராத் (டைட்டன்ஸ்) அணி அற்புதமாக இருந்தது. அதுவே ஒரு புத்தம் புதிய அணி கோப்பையை வெல்லவும் காரணமாக அமைந்தது. கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மற்றொரு அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உண்மையிலேயே ஒரு நல்ல அணியைப் பெற்றுள்ளது என்று நான் நினைக்கிறேன். கடந்த ஆண்டு, ஏலத்திற்கு பிறகு, அவர்களால் ஒரு நல்ல அணியை ஒன்றிணைக்க முடிந்தது என்பதில் ராஜஸ்தான் அணி எங்களை மிகவும் ஈர்த்தது. இந்த ஆண்டு மீண்டும் அதை உருவாக்கியுள்ளனர். ஆகவே கோப்பையை வெல்லும் சாதக அணியில் ராஜஸ்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் என்றார்.

________________

எந்த வரிசையிலும் விளையாட தயார் - ரகானே சொல்கிறார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள அஜிங்க்யா ரகானே அளித்த பேட்டியில் கூறியதாவது.,  நான் 20 ஓவர் கிரிக்கெட்டில் எப்போதும் தொடக்க வீரராக களம் இறங்கி இருக்கிறேன். ஆனால் நிர்வாகமும், கேப்டனும் என்னிடம் என்ன கேட்டாலும் அதை செய்ய தயாராக இருக்கிறேன். என்னை பொறுத்தவரை எப்போதும் அணிதான் முக்கியம். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறப்பாக செயல்படுவேன். எந்த வரிசையிலும் விளையாட தயாராக இருக்கிறேன்.

டோனியின் கேப்டன்ஷிப் கீழ் மீண்டும் விளையாட ஆவலுடன் இருக்கிறேன். இது நான் கற்று கொள்ள சிறந்த வாய்ப்பு. அவரது தலைமையின் கீழ் இந்திய அணியில் விளையாடி இருக்கிறேன். முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுகிறேன். சி.எஸ்.கே. குடும்பத்தில் ஒரு அங்கமாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

________________

பும்ராவுக்கு பதில் மும்பை அணியில் சந்தீப் வாரியர் 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்த தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும் மோதின.  

இந்த நிலையில் காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மும்பை அணி வீரர் பும்ராவுக்கு பதிலாக மாற்று வீரரை மும்பை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி வேகப்பந்துவீச்சாளார் சந்தீப் வாரியர் மும்பை அணியில் இணைந்துள்ளார். ரூ.50 லட்சத்துக்கு அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை அணி தனது தொடக்க ஆட்டத்தில் பெங்களுரு அணியுடன் வரும் 2-ம் தேதி மோதுகிறது.

________________

ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றும் அணி: ஜாக் காலிஸ், வாகன் கணிப்பு

ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் வெல்ல வாய்ப்பு இல்லை எனவும் ராஜஸ்தான் அணிதான் வெல்லும் எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். இது குறித்து மைக்கேல் வாகன் கூறியதாவது:- ஐ.பி.எல். போட்டியில் இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கானது என்று கருதுகிறேன். அந்த அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் என்றார். 

அதேபோல் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் கூறும்போது:- ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்றில் எந்த அணிகள் விளையாட போகின்றன என்பதை கணிப்பது எப்போதும் கடினமானது. ஏனென்றால் அனைத்து அணிகளும் சம பலத்துடன் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் இடையே போட்டி இருக்கும். கோப்பையை டெல்லி அணி வெல்லும் என்று கருதுகிறேன் என்றார்.

________________

ஸ்பெயின் மாஸ்டர்ஸ்: காலிறுதியில் பி.வி. சிந்து

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் 2023-ம் ஆண்டுக்கான ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, இந்தோனேசியாவைச் சேர்ந்த வர்தானியுடன் மோதினார். இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து