முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாது விவகாரம்: தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 1 ஜூன் 2023      தமிழகம்
OPS 2022 12 29

சென்னை, கர்நாடக அரசிடம் பேசி மேகதாது அணை திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றதையடுத்து, நீர்பாசனத் துறை உயர் அதிகாரிகளுக்கான கூட்டத்திலேயே மேகதாது திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக துணை முதல்வர் உத்தரவிட்டு இருப்பது தமிழக மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காவேரி ஆறு பாயும் மாநிலங்களில், கர்நாடகம் மேல் நதிக்கரை மாநிலமாக விளங்குவதால், கூடுதலாக அணை கட்டுவதற்கு கீழ்மடை மாநிலமான தமிழகத்தின் அனுமதியை பெற்றே ஆகவேண்டும். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டிலும் நிலுவையில் உள்ளது. 

இந்தச் சூழ்நிலையில், மேகதாது அணைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கர்நாடக மாநில துணை முதல்வர் கூறியிருப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், சுப்ரீம் கோர்ட்டையும் அவமதிப்பதாகும். 

கர்நாடக மாநிலத்தின் இந்த நிலைப்பாடு காவேரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை பறிக்கும் செயலாகும். ஆகவே தமிழக முதல்வர், கர்நாடக அரசிடம் பேசி மேகதாது அணை திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து