முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாது விவகாரத்தில் தமிழக காங்கிரசார் வாய் திறக்காதது ஏன்? பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி

வியாழக்கிழமை, 1 ஜூன் 2023      தமிழகம்
Annamalai 2023 03 18

தூத்துக்குடி, மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரசார் வாய் திறக்காதது ஏன் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். 

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டுவதை கர்நாடகாவில் வைத்தே நான் எதிர்த்தேன். அம்மாநில துணை முதல்வர் சிவக்குமார் மேகதாது அணை கட்டப்படும் என உறுதியாக கூறியுள்ளார். இது குறித்து தமிழக காங்கிரசார் வாய் திறக்கவில்லை. 

தமிழக உரிமைகளுக்கு எதிராக கர்நாடகா, கேரளா செயல்பட்டாலும் அது குறித்து தமிழக முதல்வர்  எதிர்க்கவில்லை. அவர் தமிழக உரிமைகளை விட்டு கொடுத்து வருகிறார். மேகதாது அணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் அதனை நாங்கள் தடுத்து நிறுத்துவோம். அந்த ஆற்றல் எங்களுக்கு உண்டு. 

முதல்வரின் வெளிநாடு பயணம் வரவேற்கத்தக்கது. முதல்வர் கண்டிப்பாக வெளிநாடு செல்ல வேண்டும் அப்போது தான் முதலீடுகள் பெருகும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து