முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் விபத்து பயணிகளுக்கு ரத்ததானம் செய்ய மருத்துவமனைகளில் குவிந்த மக்கள்

சனிக்கிழமை, 3 ஜூன் 2023      இந்தியா
blood-donation 2023-06-03

Source: provided

புவனேஸ்வர் : ஒடிசாவின் பாலசோர் பகுதியில் விபத்து நடந்ததை குறித்து அறிந்த உடன் காயம் அடைந்தவர்களை காப்பாற்றும் வகையில் ரத்த தானம் செய்ய ஏராளமானோர் தாமாக முன்வந்து மருத்துவமனைகளில் குவிந்தனர். 

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதிய விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 900-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

சம்பவம் குறித்து அறிந்த உடன், தேசிய மற்றும் மாநில பேரிடர் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்திய ராணுவ வீரர்களும் நேற்று முன்தினம் இரவு முதல் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

காயமடைந்த 900-க்கும் மேற்பட்டோர் பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் ஆயிரக்கணக்கான மக்கள், தாமாக முன்வந்து, ரத்தம் கொடுக்க மருத்துவமனைகளில் குவிந்தனர். இது மனித நேயம், இன்னும் மரிக்கவில்லை என்பதை காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக கட்டாக் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கூறுகையில், நூற்றுக்கணக்கானோர் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்தனர். கட்டாக், பாலசோர் மற்றும் பத்ரக் ஆகிய பகுதிகளில் 3 ஆயிரம் யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து