எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, “பொய்ச் செய்திகள் பரவுவதைத் தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க முடியாதா? இது ஒரு தணிக்கை முறைதானே? இதில் என்ன தவறு ? காவல் துறைக்கு உதவுவதற்காகத்தானே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது?” என்று தமிழக அரசு அமைத்துள்ள உண்மை சரிபார்ப்புக் குழுவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அனைத்து ஊடகத் தளங்களிலும் தமிழக அரசு, அமைச்சகங்கள், துறைகள், தொடர்பாக வெளிவரக்கூடிய தவறான செய்திகளை கண்டறியும் வகையில், அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையின் கீழ் உண்மை சரிபார்ப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழு அமைத்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் நிர்மல்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் குறித்து அவதூறு கருத்தை வெளியிட்ட கோவையை சேர்ந்த மருதாச்சலம் என்பவரின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, அரசியல் சாசன பதவிகளை வகிப்பவர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்களை கண்காணிப்பதற்காக அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவை அமைக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்பின்னர், சமூக வலைதளங்களில் தவறான மற்றும் ஆபாச கருத்துகள் பகிரப்படுவதை தடுத்து நடவடிக்கை எடுக்க சமூக ஊடக பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று, கடந்த மாதம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மற்றொரு வழக்கை முடித்துவைத்தது. ஆனால், காவல் துறையை விட்டுவிட்டு "உண்மை சரிபார்ப்பு குழு" என அரசு அமைத்திருக்கிறது. குடிமக்களின் பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல் மட்டும் அல்லாமல், எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் முயற்சி இது. காவல் துறையின் வரம்புக்கு வெளியே இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்த அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இந்தநிலையில், மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஒரு அமைப்பை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பை தள்ளிவைத்துள்ளது. எனவே, தமிழக அரசு கடந்த அக்டோபர் 6-ம் தேதி பிறப்பித்துள்ள அரசாணைக்கு தடைவிதிக்க வேண்டும். இந்த திட்டத்தின் இயக்குநராக ஐயன் கார்த்திகேயன் செயல்பட தடை விதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், "இது தொடர்பாக, மத்திய அரசு ஏற்கெனவே விதிகளை வகுத்துள்ளது. தமிழக அரசு அமைத்துள்ள உண்மை சரிபார்ப்புக் குழு, தகவல் தொழில் நுட்ப சட்ட விதிகளுக்கு முரணானது. மேலும், உண்மை சரிபார்ப்புக் குழுவை அமைக்க மத்திய அரசுக்குதான் அதிகாரம் உள்ளது. இது அரசின் கையில் உள்ள ஆபத்தான ஆயுதம்" என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “பொய்ச் செய்திகள் பரவுவதைத் தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க முடியாதா? இது ஒரு தணிக்கை முறைதானே? இதில் என்ன தவறு? காவல் துறைக்கு உதவுவதற்காகத்தானே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது?” என்று கேள்வி எழுப்பினார். அப்போது, தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், குழுவின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், பிஹார் தொழிலாளர்கள் தொடர்பான தவறான தகவல்கள் பரவியது குறித்து சுட்டிகாட்டி, அரசு அமைத்துள்ள குழுவில் தகுதியான நபரைத்தான் நியமித்துள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசு நியமித்துள்ள உண்மை சரிபார்ப்புக் குழுவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, அந்த வழக்கின் முடிவை தெரிந்துகொள்ளலாம் எனக் கூறி, அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை டிசம்பர் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஓட்ஸ் சீஸ் கீரை தோசை![]() 1 day 18 hours ago |
மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜாம்![]() 4 days 21 hours ago |
உருளைக்கிழங்கு கேரட் ஆம்லெட்![]() 1 week 1 day ago |
-
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் அட்டவணை 8-ம் தேதி வெளியீடு : தேர்தல் ஆணையம் அறிவிப்பு
03 Dec 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் அட்டவணை வரும் 8-ம் தேதி வெளியிடப்படும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
4 மாநில தேர்தல் முடிவு: நடிகை குஷ்பு கருத்து
03 Dec 2023சென்னை : 4 மாநிலத் தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றி பிரதமர் மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
-
மிக்ஜாம் புயல் எதிரொலி: வங்கிகள், ஐ.டி. நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை
03 Dec 2023சென்னை : மிக்ஜாம் புயல் இன்று காலை கரையை கடக்கும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில்,சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து வங்கிக
-
பா.ஜ.க. மீது அசைக்க முடியாத ஆதரவை வழங்கிய மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி
03 Dec 2023புதுடெல்லி : பா.ஜ.க. மீது அசைக்க முடியாத ஆதரவை வழங்கிய மக்களுக்கு நன்றி என்று 4 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு மத்திய அரசு விருது : டெல்லியில் இன்று வழங்கப்படுகிறது
03 Dec 2023சென்னை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் என்ற விருது டெல்லியில் இன்று வழங்கப்படுகிறது.
-
உக்ரைன் முன்னாள் அதிபர் நாட்டை விட்டு வெளியேற தடை
03 Dec 2023கீவ் : உக்ரைன்-ரஷ்யா போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் முன்னாள் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ (58) வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.
-
சோதனையின்போது அத்துமீறல்: தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது டி.ஜி.பி.யிடம் அமலாக்கத்துறை புகார்
03 Dec 2023சென்னை : சோதனையின்போது அத்துமீறி நடந்து கொண்டதாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மீது டி.ஜி.பி.யிடம் அமலாக்கத்துறையினர் புகார் அளித்துள்ளனர்.
-
அயோத்தி ராமர் கோவிலுக்கு கொண்டு செல்ல தாமிரபரணி புனிதநீர் சேகரிப்பு
03 Dec 2023நெல்லை : அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக திருநெல்வேலி தாமிரபரணியில் இருந்து புனிதநீர் சேகரிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
-
மிக்ஜாம் புயல்: சென்னை மெரினா கடற்கரை நுழைவாயில் மூடல்
03 Dec 2023சென்னை : மிக்ஜாம் புயல் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரை நுழைவாயில் மூடப்பட்டுள்ளது.
-
மிக்ஜாம் புயல்: மின்தடை ஏற்படாத வகையில் பணிபுரிய மின்துறை தயார் : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
03 Dec 2023திருவள்ளூர் : எல்லாவிதத்திலும், மின்தடை ஏற்படாத வகையிலும், அப்படி ஏதேனும் புயல் காற்றின் வேகத்தின் காரணமாக மின் தடை ஏற்பட்டாலும், உடனடியாக அந்த இடத்திலே பணிபுரிய மின் வ
-
பரங்கிமலை மெட்ரோ பார்க்கிங் நாளை வரை தற்காலிக மூடல்
03 Dec 2023சென்னை : பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தும் இடம் நாளை வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
-
நிலச்சரிவு: ஜாம்பியாவில் சுரங்கத்தில் சிக்கிய 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு
03 Dec 2023லுசாகா : ஜாம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் தாமிர சுரங்கங்களில் தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கி கொண்டனர்.
-
மிக்ஜாம் புயல் எதிரொலி: பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அலர்ட் விடுத்த பேரிடர் துறை
03 Dec 2023சென்னை : மிக்ஜாம் புயல் தொடர்பாக குறுஞ்செய்தி மூலமாக பொது மக்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்ணை துறை நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
மிக்ஜாம் புயல்: 5 துறைமுகங்களில் 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
03 Dec 2023சென்னை : மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் 5 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவால் விமானம், ரயில் போக்குவரத்து பாதிப்பு
03 Dec 2023பெர்லின் : ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவால் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது : 4 மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும்
03 Dec 2023புதுடெல்லி : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று கூடுகிறது.
-
வாக்களித்த மக்களுக்கு நன்றி: சித்தாந்த போர் தொடரும்: ராகுல்
03 Dec 2023புதுடெல்லி : ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில்.
-
மிக்ஜாம் புயல் எதிரொலி: 4, 6-ம் தேதிகளில் நடைபெறவிருந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வு ஒத்திவைப்பு
03 Dec 2023சென்னை : மிக்ஜாம் புயல் காரணமாக இன்று 4-ம் தேதி மற்றும் 6-ம் தேதிகளில் நடைபெறவிருந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி.
-
மிக்ஜாம் புயலால் 3 விமானங்கள் ரத்து: சென்னையில் 9 விமானங்களின் வருகை புறப்பாடு தாமதம்
03 Dec 2023சென்னை : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை மிக்ஜாம் புயல் காரணமாக, நேற்று சென்னை விமான நிலையத்தில் 9 விமானங்களின் வருகை, புறப்பாட்டில் சுமார் ஒரு மணி
-
மிக்ஜாம் புயல்: நீர்நிலைகளில் செல்பி எடுக்க வேண்டாம் : வருவாய்த்துறை அமைச்சர் அறிவுறுத்தல்
03 Dec 2023சென்னை : மிக்ஜாம் புயல் எதிரொலியாக இன்று வரை பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் எனவும் நீர்நிலைகளில் செல்பி எடுக்க வேண்டாம் எனவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர
-
4 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிப்பு
03 Dec 2023சென்னை : மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இண்டியா கூட்டணியின் அடுத்த கூட்டம் டெல்லியில் வரும் 6-ம் தேதி நடக்கிறது : காங்கிரஸ் தலைவர் கார்கே தகவல்
03 Dec 2023புதுடெல்லி : இண்டியா கூட்டணியின் அடுத்த கூட்டம் வரும் 6-ம் தேதி டெல்லியில் நடைபெறவிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
-
தனி பின்கோடு-முத்திரையுடன் ஆண்டுக்கு ஒருமுறை செயல்படும் சபரிமலை தபால் அலுவலகம்
03 Dec 2023திருவனந்தபுரம் : இந்தியாவிலேயே ஆண்டுக்கு ஒருமுறை தனி பின்கோடு மற்றும் முத்திரையுடன் செயல்படும் தபால் அலுவலகம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ளது.
-
கைதான அமலாக்கத்துறை அதிகாரி மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்
03 Dec 2023மதுரை : திண்டுக்கல் சிறையில் இருந்த அமலாக்க துறை அதிகாரி அங்கிட் திவாரி நேற்று மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்க
-
இன்று முதல் 3 நாட்கள் இந்தியாவில் கென்யா அதிபர் ரூடோ சுற்றுப்பயணம்
03 Dec 2023நைரோபி : கென்ய அதிபர் வில்லியம் சாமோய் ரூடோ இன்று முதல் 6-ம் தேதி வரை இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.