முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறந்தாங்கி அருகே தேர் கட்டும்போது விபத்து: ஒருவர் பலி - 5 பேர் காயம்

திங்கட்கிழமை, 24 ஜூன் 2024      தமிழகம்
Suicide 2023 04 29

புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தேர் கட்டும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார். மேலும், 5 பேருக்கு பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாத்தூர் ராமசாமிபுரத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவுக்காக தேர் கட்டும் பணி திங்கள்கிழமை பகலில் நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக தேர் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கீழே நின்றிருந்த ராமசாமிபுரத்தைச் சேர்ந்த எஸ். மகாலிங்கம் (70) என்பவர் உள்பட 6 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் மகாலிங்கம் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பலியானார். மற்ற 5 பேருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து