எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான இழப்பீட்டினை வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட அதிகனமழை காரணமாக விழுப்பாம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஆறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மொத்தத்தில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ. திண்டிவனத்தில் 37 செ.மீ. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செ.மீ, திருவண்ணாமலையில் 22 செ.மீ., என வரலாறு காணாத அளவுக்கு மழைப் பொழிவு பல பகுதிகளில் ஏற்பட்டதன் விளைவாக ஆறுகள் மற்றும் ஏரிகளில் நீர் நிரம்பி, ஊர்களுக்குள் வெள்ளநீர் சென்றதன் காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் தண்ணீ மூழ்கின. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுக்காததன் காரணமாக பாதிப்பு அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட அதிகன மழை காரணமாக, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பயிர்கள், வீடுகள், மீன்பிடி படகுகள், வாகனங்கள் ஆகியவை சேதமடைந்துள்ளன. பல பகுதிகளில் கிராம மக்கள் வெளியே செல்ல முடியாமல் கிராமங்களிலேயே முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு அளிப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உடுக்க உடை, ரொக்கம் முதலியவற்றை வழங்குவதும், பகுதியாக பாதிக்கப்பட்டுள்ள குடிசைகள், முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள குடிசைகளுக்கு நிவாரண உதவி வழங்குவதும், பயிர்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவதும், உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதும். உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதும், அரசின் கடமையாகும்.
இந்த உதவித் தொகையை வழங்கும்போது, மத்திய அரசின் பேரிடர் நிவாரண வரையறையை பின்பற்றாமல், தற்போதுள்ள விலைவாசியைக் கருத்தில் கொண்டு. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5,000 ரூபாய் நிவாரண உதவியும், பகுதியாக பாதிக்கப்பட்டுள்ள குடிசைகளுக்கு 25,000 ரூபாய் நிவாரண உதவியும், முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள குடிசைகளுக்கு 50,000 ரூபாய் நிவாரண உதவியும், தெற் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், இதர நீர்ப்பாசன பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாயும், பலா, முந்திரி போன்ற தோட்டப் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35,000 ரூபாயும் வழங்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டினை, நிவாரண உதவியை உடனடியாக வழங்க வேண்டுமென்றும், வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை உடனடியாக சீர்செய்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 3 weeks ago |
-
இங்கி. தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக்கான ரோகித் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு
18 Jan 2025மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்படனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
இன்று முதல் போர் நிறுத்தம் அமல்: ஒரு இஸ்ரேலிய பிணை கைதிக்கு 50 பாலஸ்தீனியர்கள் விடுதலை
18 Jan 2025ஜெருசலேம் : இன்று முதல் 3 கட்டங்களாக இஸ்ரேலிய பிணை கைதிகள் 33 பேருக்கு பதில் 1,904 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படுவுள்ளனர்.
-
யுவராஜ் தந்தை பாராட்டு
18 Jan 2025சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக மிகவும் சிறப்பான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளதாக இந்திய அணியின் முன்னா
-
ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மத்திய பா.ஜ.க. அரசு மாநில அரசுகளை அழிக்க பார்க்கிறது : தி.மு.க. சட்டத்துறை 3-வது மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
18 Jan 2025சென்னை : மோடியை சர்வாதிகாரி ஆக்கவே ஒரே நாடு ஒரே தேர்தல் பயன்படும் என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மாநில அரசுகளை அழிக்கப்பார்க்கிறது மத
-
போலீசார் முதலில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்: அண்ணாமலை
18 Jan 2025சென்னை : சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் காவல்துறை முதலில் ஈடுபடவேண்டும் என மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
-
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் புதிய தலைவரானார் தேஜஸ்வி யாதவ்
18 Jan 2025பாட்னா : ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் புதிய தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
-
ஈரான் சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் நீதிபதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
18 Jan 2025தெஹ்ரான் : ஈரான் சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 நீதிபதிகள் உயிரிழந்தனர்.
-
பெண் மருத்துவர் கொலையில் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு தொடர்பு : நீதிமன்றத்தில் சஞ்சய் ராய் கூச்சலால் பரபரப்பு
18 Jan 2025கொல்கத்தா : பெண் மருத்துவர் கொலையில் ஐபிஎஸ் அதிகாரிக்கு தொடர்பிருப்பதாக நீதிமன்றத்தில் சஞ்சய் ராய் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
நாட்டின் உண்மை நிலையை புரிந்து கொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: ராகுல் காந்தி
18 Jan 2025புதுடெல்லி : நாட்டின் உண்மையான நிலைமையைப் புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
-
ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுகிறார் ரோகித்
18 Jan 2025மும்பை : ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவதை ரோகித் சர்மா உறுதி செய்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறார்.
-
காயம் காரணமாக ரஞ்சி கோப்பை தொடரில் இருந்து கோலி, கே.எல்.ராகுல் விலகல்..?
18 Jan 2025மும்பை : காயம் காரணமாக ரஞ்சி கோப்பை தொடரில் விராட் கோலி, கே.எல்.ராகுல் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-01-2025
19 Jan 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-01-2025
19 Jan 2025 -
அமெரிக்காவின் அதிபராக 2-வது முறை டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்பு
19 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2-வது முறையாக மீண்டும் இன்று (ஜன. 20) பதவியேற்கவிருக்கிறார்.
-
மர்ம நோய்க்கு 16 பேர் உயிரிழப்பு: காஷ்மீரில் மத்தியக்குழு ஆய்வு
19 Jan 2025ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் பரவும் மர்ம நோய்க்கு 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு மத்திய குழுவினர் நேரில் ஆய்வு நடத்தினர்.
-
தொடர் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு: குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
19 Jan 2025தென்காசி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற்ற மத்திய அரசு
19 Jan 2025திருப்பதி : திருப்பதியில் நடந்த அசம்பாவித சம்பவங்கள் குறித்து விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை மத்திய அரசு திரும்ப பெற்றது.
-
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் திருவள்ளுவர் கலாச்சார மையத்தால் உலக தமிழர்கள் மகிழ்ச்சி: எல்.முருகன்
19 Jan 2025சென்னை : யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்பட்டுள்ளது உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ள
-
கெஜ்ரிவாலை கொலை செய்ய பா.ஜ.க.வினர் சதி: முதல்வர் அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டு
19 Jan 2025புதுடில்லி : ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பா.ஜ.க முயற்சிப்பதாக டெல்லி முதல்வர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.
-
பரந்தூர் விமான நிலையத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு: போராட்டக்காரர்களை இன்று சந்திக்கிறார் த.வெ.க. தலைவர்
19 Jan 2025சென்னை : பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை இன்று (திங்கட்கிழமை) த.வெ.க.
-
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு இந்தியா வருகிறார் டொனால்ட் டிரம்ப்
19 Jan 2025நியூயார்க் : 47வது அமெரிக்க அதிபராகும் டிரம்ப் பதவியேற்று 100 நாட்களுக்குள் டிரம்ப் சீனா மற்றும் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
நடிகர் சைப் அலிகான் வழக்கு: கைதான முக்கிய குற்றவாளி வங்கதேசத்தை சேர்ந்தவர்
19 Jan 2025மும்பை : நடிகர் சைப் அலிகான் வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி வங்கதேசத்தை சேர்ந்தவர் என்று மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
-
பரந்தூர் செல்லும் த.வெ.க. தலைவருக்கு கட்டுப்பாடா? - காஞ்சிபுரம் எஸ்.பி. விளக்கம்
19 Jan 2025சென்னை : பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரைச் சந்திக்க விஜய்க்கு எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை என காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.
-
இன்று அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக வாஷிங்டனில் பலர் போராட்டம்
19 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
19 Jan 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.24 அடியில் இருந்து 112.94 அடியாக குறைந்துள்ளது.