எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளிலேயே இங்கிலாந்து தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணியளவில் தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆடும் அணியை (பிளேயிங் 11) இங்கிலாந்து அறிவித்துள்ளது. அணியில் ஒரே மாற்றமாக கடந்த போட்டியில் விளையாடிய கிறிஸ் வோக்சுக்கு பதிலாக மேத்யூ பாட்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் பிளேயிங் 11 பின்வருமாறு:- ஜாக் கிராலி, பென் டக்கெட், ஜேக்கம் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், ஒல்லி போப், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ், பிரைடன் கார்ஸ் மற்றும் ஷோயப் பஷீர்.
_____________________________________________________________________________________________________________
தமிழ்நாடு அணி அறிவிப்பு
இந்தியாவில் தற்போது உள்ளூர் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதையடுத்து 2024 - 25க்கான விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் 21ம் தேதி முதல் அடுத்த மாதம் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடருக்கான தமிழக அணி குரூப் டி-யில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சாய் கிஷோர் கேப்டனாகவும், ஜெகதீசன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அணியில் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள சாய் சுதர்சன் இடம் பெறவில்லை. இந்த அணியில் ஷாரூக் கான், பாபா இந்திரஜித், வருண் சக்கரவர்த்தி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். தமிழக அணி விவரம்; சாய் கிஷோர் (கேப்டன்), ஜெகதீசன் என் (துணை கேப்டன்), பாபா இந்திரஜித், ஆண்ட்ரே சித்தார்த், பூபதி வைஷ்ணா குமார், துஷார் ரஹேஜா, ஷாரூக் கான், முகமது அலி, சந்தீப் வாரியர், தீபேஷ், அச்யுத், பிரணவ் ராகவேந்திரா, அஜித் ராம், வருண் சக்கரவர்த்தி, விஜய் ஷங்கர், பிரதோஷ் ரஞ்சன் பால்.
_____________________________________________________________________________________________________________
மும்பைக்கு புதிய பயிற்சியாளர்
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் ஏலம் ஆகியவை சமீபத்தில் நடந்தது. இந்த ஏலத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 18 வீரர்களை வாங்கியது. இதற்கு முன்பாக மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், பும்ரா, ரோகித் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகிய 5 வீரர்களை தக்கவைத்தது. ஏலத்தில் ராபின் மின்ஸ், வில் ஜேக்ஸ், ரியான் ரிக்கெல்டன், டிரெண்ட் பவுல்ட் உள்ளிட்ட வீரர்களை வாங்கியது. 5 முறை சாம்பியனான மும்பை அடுத்த ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றி ஐ.பி.எல் கோப்பையை அதிக முறை வென்ற அணி என்ற சாதனையை படைக்க காத்து கொண்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரரான கார்ல் ஹாப்கின்சனை நியமித்துள்ளதாக மும்பை அணி தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கார்ல் ஹாப்கின்சன் 2019 ஒருநாள் உலகக்கோப்பை, 2022 டி20 உலகக்கோப்பையின் போது இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
_____________________________________________________________________________________________________________
ஒலிம்பிக் போட்டி குழுவுடன் சந்திப்பு
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்கில் 128 வருடங்களுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டி இடம் பெற உள்ளது. வரும் 2028-ம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் 2032-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்படுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் கடந்த 1-ம் தேதி ஐசிசி-யின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா, பிரிஸ்பன் நகரில், பிரிஸ்பன் ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்கள் குழுவினரை நேரில் சந்தித்து பேசினார். இதில் போட்டி ஏற்பாட்டாளர்கள் குழுவின் தலைவார் சிண்டி ஹூக், கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
_____________________________________________________________________________________________________________
தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அடுத்ததாக ஒருநாள் தொடரும், இறுதியில் டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பவுமா தலைமையிலான அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளார் ரபடா நீண்ட நாட்கள் கழித்து இடம்பிடித்துள்ளார்.தென் ஆப்பிரிக்க அணி விவரம் பின்வருமாறு., பவுமா (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், டோனி டி சோர்ஜி, மார்கோ ஜான்சன், கிளாசென், கேசவ் மகராஜ், மபாகா, மார்க்ரம், டேவிட் மில்லர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, ககிசோ ரபடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, ரஸ்ஸி வான் டெர் துசென்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் எதிரொலி: 22 கோடி ரூபாய் வரை இழப்பு
18 Nov 2025சென்னை: அண்டை மாநிலங்களுக்கு இயக்கும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
18 Nov 2025தென்காசி: கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-18-11-2025
18 Nov 2025 -
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்பா?
18 Nov 2025சென்னை, கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-18-11-2025
18 Nov 2025 -
வாக்காளர் அட்டையில் 'இனிசியல்' இல்லையா? - வாக்காளர்களுக்கு வந்தது புது சிக்கல்
18 Nov 2025சென்னை : வாக்காளர் அட்டையில் 'இனிசியல்' இல்லையா? வாக்காளர்களுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
மருத்துவர் பரிந்துரைக்க வேண்டும்: இனி இருமல் மருந்து வாங்க வருகிறது புதிய கட்டுப்பாடு
18 Nov 2025புதுடெல்லி, மருத்துவர் பரிந்துறையின்றி இனி இருமல் மருந்து வாங்க முடியாது புதிய கட்டுப்பாடு அமழுக்கு வருகிறது.
-
மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு
18 Nov 2025மேட்டூர் : மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
-
சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை சட்டமன்ற தி.மு.க. தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு : கோவையில் வெற்றி பெற செந்தில் பாலாஜிக்கு அறிவுறுத்தல்
18 Nov 2025சென்னை : தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
-
இந்தோனேசியா: நிலச்சரிவில் 18 பேர் பலி
18 Nov 2025ஜாவா: இந்தோனேசியாவில் நிலச்சரிவில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
என்னுடைய கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் தேவை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய கர்நாடக சிறுவன்
18 Nov 2025பெங்களூரு: கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி பிரதமர் மோடிக்கு சிறுவன் கடிதம் எழுதியுள்ளது தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவிடம் இருந்து இந்தியா சமையல் கியாஸ் வாங்க ஒப்பந்தம் வர்த்தகத்துறை செயலாளர் தகவல்
18 Nov 2025புதுடெல்லி: அமெரிக்காவிடம் இருந்து சமையல் கியாஸ் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
-
ஐதராபாத் அணி கேப்டன் அறிவிப்பு
18 Nov 2025ஐதராபாத்: வரும் ஐ.பி.எல். சீசனிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ்தான் செயல்படுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நீலகிரி: யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதிகள் இடிப்பு
18 Nov 2025நீலகிரி: நீலகிரியில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதிகள் ஐகோர்ட் உத்தரவின்படி இடிக்கப்பட்டது.
-
ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம் செங்கோட்டையன் நம்பிக்கை
18 Nov 2025மதுரை: ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் அ.தி.மு.க.வில் இணைவது தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
வருகிற 25-ம் தேதி வரை சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும்
18 Nov 2025சென்னை: சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள் வருகிற 25-ந் தேதி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட மானியம்: அமைச்சர் பன்னீர் செல்வம் தகவல்
18 Nov 2025சென்னை: மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி சம்பவத்தில் தொடரும் விசாரணை: இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை போன்று நடத்தும் சதி திட்டம் அம்பலம்
18 Nov 2025புதுடெல்லி: இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்தி ட்ரோன் தாக்குதல்களை போல் தாக்குதல் நடத்த டெல்லி வெடிகுணடு தாக்குதலுக்கு முன் பயங்கர சதி திட்டம் திட்டியது தற்போது விசாரணையில
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள்: வருவாய்த்துறை ஊழியர்கள் முழுமையாக புறக்கணிப்பு பொதுத்தேர்தல் துறை செயலாளருக்கு கடிதம்
18 Nov 2025சென்னை: தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளை வருவாய்த்துறை ஊழியர்கள் புறக்கணித்தனர்.
-
சென்னை பெருநகரத்திற்கான அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொது போக்குவரத்து திட்டங்கள் வெளியீடு
18 Nov 2025சென்னை: சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன்: 10 அணிகளின் பயிற்சியாளர்கள் விவரம்
18 Nov 2025மும்பை: ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசனில் இடம் பெறவுள்ள 10 அணிகளின் பயிற்சியாளர்கள் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. சி.எஸ்.கே.
-
சபரிமலை கோவிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் : பாதுகாப்பிற்கு கூடுதல் போலீசார் குவிப்பு
18 Nov 2025சபரிமலை : வருடாந்திர மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நிகழ்ச்சிக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
வரும் ஜனவரிக்குள் வருமான வரி கணக்கு படிவங்கள் வெளியிடப்படும் நேரடி வரிகள் வாரியம் தகவல்
18 Nov 2025புதுடெல்லி: வருமான வரி கணக்கு படிவங்கள் ஜனவரிக்குள் வெளியிடப்படும் என்று நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
-
அதிபர் ஜெலன்ஸ்கி சுற்றுப்பயணம்: பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்குகிறது உக்ரைன்
18 Nov 2025பாரீஸ் : பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்கள் வாங்க உக்ரைன் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
தமிழக வரலாற்றிலேயே முதல் முறை: த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டு அடையாள அட்டை
18 Nov 2025சென்னை; தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.


