எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளிலேயே இங்கிலாந்து தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணியளவில் தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆடும் அணியை (பிளேயிங் 11) இங்கிலாந்து அறிவித்துள்ளது. அணியில் ஒரே மாற்றமாக கடந்த போட்டியில் விளையாடிய கிறிஸ் வோக்சுக்கு பதிலாக மேத்யூ பாட்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் பிளேயிங் 11 பின்வருமாறு:- ஜாக் கிராலி, பென் டக்கெட், ஜேக்கம் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், ஒல்லி போப், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ், பிரைடன் கார்ஸ் மற்றும் ஷோயப் பஷீர்.
_____________________________________________________________________________________________________________
தமிழ்நாடு அணி அறிவிப்பு
இந்தியாவில் தற்போது உள்ளூர் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதையடுத்து 2024 - 25க்கான விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் 21ம் தேதி முதல் அடுத்த மாதம் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடருக்கான தமிழக அணி குரூப் டி-யில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சாய் கிஷோர் கேப்டனாகவும், ஜெகதீசன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அணியில் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள சாய் சுதர்சன் இடம் பெறவில்லை. இந்த அணியில் ஷாரூக் கான், பாபா இந்திரஜித், வருண் சக்கரவர்த்தி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். தமிழக அணி விவரம்; சாய் கிஷோர் (கேப்டன்), ஜெகதீசன் என் (துணை கேப்டன்), பாபா இந்திரஜித், ஆண்ட்ரே சித்தார்த், பூபதி வைஷ்ணா குமார், துஷார் ரஹேஜா, ஷாரூக் கான், முகமது அலி, சந்தீப் வாரியர், தீபேஷ், அச்யுத், பிரணவ் ராகவேந்திரா, அஜித் ராம், வருண் சக்கரவர்த்தி, விஜய் ஷங்கர், பிரதோஷ் ரஞ்சன் பால்.
_____________________________________________________________________________________________________________
மும்பைக்கு புதிய பயிற்சியாளர்
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் ஏலம் ஆகியவை சமீபத்தில் நடந்தது. இந்த ஏலத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 18 வீரர்களை வாங்கியது. இதற்கு முன்பாக மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், பும்ரா, ரோகித் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகிய 5 வீரர்களை தக்கவைத்தது. ஏலத்தில் ராபின் மின்ஸ், வில் ஜேக்ஸ், ரியான் ரிக்கெல்டன், டிரெண்ட் பவுல்ட் உள்ளிட்ட வீரர்களை வாங்கியது. 5 முறை சாம்பியனான மும்பை அடுத்த ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றி ஐ.பி.எல் கோப்பையை அதிக முறை வென்ற அணி என்ற சாதனையை படைக்க காத்து கொண்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரரான கார்ல் ஹாப்கின்சனை நியமித்துள்ளதாக மும்பை அணி தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கார்ல் ஹாப்கின்சன் 2019 ஒருநாள் உலகக்கோப்பை, 2022 டி20 உலகக்கோப்பையின் போது இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
_____________________________________________________________________________________________________________
ஒலிம்பிக் போட்டி குழுவுடன் சந்திப்பு
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்கில் 128 வருடங்களுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டி இடம் பெற உள்ளது. வரும் 2028-ம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் 2032-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்படுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் கடந்த 1-ம் தேதி ஐசிசி-யின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா, பிரிஸ்பன் நகரில், பிரிஸ்பன் ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்கள் குழுவினரை நேரில் சந்தித்து பேசினார். இதில் போட்டி ஏற்பாட்டாளர்கள் குழுவின் தலைவார் சிண்டி ஹூக், கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
_____________________________________________________________________________________________________________
தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அடுத்ததாக ஒருநாள் தொடரும், இறுதியில் டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பவுமா தலைமையிலான அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளார் ரபடா நீண்ட நாட்கள் கழித்து இடம்பிடித்துள்ளார்.தென் ஆப்பிரிக்க அணி விவரம் பின்வருமாறு., பவுமா (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், டோனி டி சோர்ஜி, மார்கோ ஜான்சன், கிளாசென், கேசவ் மகராஜ், மபாகா, மார்க்ரம், டேவிட் மில்லர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, ககிசோ ரபடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, ரஸ்ஸி வான் டெர் துசென்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 3 weeks ago |
-
இங்கி. தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக்கான ரோகித் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு
18 Jan 2025மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்படனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
இன்று முதல் போர் நிறுத்தம் அமல்: ஒரு இஸ்ரேலிய பிணை கைதிக்கு 50 பாலஸ்தீனியர்கள் விடுதலை
18 Jan 2025ஜெருசலேம் : இன்று முதல் 3 கட்டங்களாக இஸ்ரேலிய பிணை கைதிகள் 33 பேருக்கு பதில் 1,904 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படுவுள்ளனர்.
-
யுவராஜ் தந்தை பாராட்டு
18 Jan 2025சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக மிகவும் சிறப்பான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளதாக இந்திய அணியின் முன்னா
-
ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மத்திய பா.ஜ.க. அரசு மாநில அரசுகளை அழிக்க பார்க்கிறது : தி.மு.க. சட்டத்துறை 3-வது மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
18 Jan 2025சென்னை : மோடியை சர்வாதிகாரி ஆக்கவே ஒரே நாடு ஒரே தேர்தல் பயன்படும் என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மாநில அரசுகளை அழிக்கப்பார்க்கிறது மத
-
போலீசார் முதலில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்: அண்ணாமலை
18 Jan 2025சென்னை : சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் காவல்துறை முதலில் ஈடுபடவேண்டும் என மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
-
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் புதிய தலைவரானார் தேஜஸ்வி யாதவ்
18 Jan 2025பாட்னா : ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் புதிய தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
-
ஈரான் சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் நீதிபதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
18 Jan 2025தெஹ்ரான் : ஈரான் சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 நீதிபதிகள் உயிரிழந்தனர்.
-
பெண் மருத்துவர் கொலையில் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு தொடர்பு : நீதிமன்றத்தில் சஞ்சய் ராய் கூச்சலால் பரபரப்பு
18 Jan 2025கொல்கத்தா : பெண் மருத்துவர் கொலையில் ஐபிஎஸ் அதிகாரிக்கு தொடர்பிருப்பதாக நீதிமன்றத்தில் சஞ்சய் ராய் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
நாட்டின் உண்மை நிலையை புரிந்து கொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: ராகுல் காந்தி
18 Jan 2025புதுடெல்லி : நாட்டின் உண்மையான நிலைமையைப் புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
-
ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுகிறார் ரோகித்
18 Jan 2025மும்பை : ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவதை ரோகித் சர்மா உறுதி செய்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-01-2025
19 Jan 2025 -
காயம் காரணமாக ரஞ்சி கோப்பை தொடரில் இருந்து கோலி, கே.எல்.ராகுல் விலகல்..?
18 Jan 2025மும்பை : காயம் காரணமாக ரஞ்சி கோப்பை தொடரில் விராட் கோலி, கே.எல்.ராகுல் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-01-2025
19 Jan 2025 -
அமெரிக்காவின் அதிபராக 2-வது முறை டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்பு
19 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2-வது முறையாக மீண்டும் இன்று (ஜன. 20) பதவியேற்கவிருக்கிறார்.
-
மர்ம நோய்க்கு 16 பேர் உயிரிழப்பு: காஷ்மீரில் மத்தியக்குழு ஆய்வு
19 Jan 2025ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் பரவும் மர்ம நோய்க்கு 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு மத்திய குழுவினர் நேரில் ஆய்வு நடத்தினர்.
-
தொடர் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு: குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
19 Jan 2025தென்காசி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற்ற மத்திய அரசு
19 Jan 2025திருப்பதி : திருப்பதியில் நடந்த அசம்பாவித சம்பவங்கள் குறித்து விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை மத்திய அரசு திரும்ப பெற்றது.
-
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் திருவள்ளுவர் கலாச்சார மையத்தால் உலக தமிழர்கள் மகிழ்ச்சி: எல்.முருகன்
19 Jan 2025சென்னை : யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்பட்டுள்ளது உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ள
-
பரந்தூர் விமான நிலையத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு: போராட்டக்காரர்களை இன்று சந்திக்கிறார் த.வெ.க. தலைவர்
19 Jan 2025சென்னை : பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை இன்று (திங்கட்கிழமை) த.வெ.க.
-
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு இந்தியா வருகிறார் டொனால்ட் டிரம்ப்
19 Jan 2025நியூயார்க் : 47வது அமெரிக்க அதிபராகும் டிரம்ப் பதவியேற்று 100 நாட்களுக்குள் டிரம்ப் சீனா மற்றும் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
கெஜ்ரிவாலை கொலை செய்ய பா.ஜ.க.வினர் சதி: முதல்வர் அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டு
19 Jan 2025புதுடில்லி : ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பா.ஜ.க முயற்சிப்பதாக டெல்லி முதல்வர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 24, 25-ம் தேதிகளில் வறண்ட வானிலையே நிலவும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
19 Jan 2025சென்னை : தமிழகத்தில் 24, 25-ம் தேதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பரந்தூர் செல்லும் த.வெ.க. தலைவருக்கு கட்டுப்பாடா? - காஞ்சிபுரம் எஸ்.பி. விளக்கம்
19 Jan 2025சென்னை : பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரைச் சந்திக்க விஜய்க்கு எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை என காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.
-
நடிகர் சைப் அலிகான் வழக்கு: கைதான முக்கிய குற்றவாளி வங்கதேசத்தை சேர்ந்தவர்
19 Jan 2025மும்பை : நடிகர் சைப் அலிகான் வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி வங்கதேசத்தை சேர்ந்தவர் என்று மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
-
இன்று அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக வாஷிங்டனில் பலர் போராட்டம்
19 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.