எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : போர் பதற்றம் சூழ்ந்த ஈரானிலிருந்து மேலும் 1000 இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருவதால், ஈரான் நாட்டிலிருந்து தனது நாட்டினரை பாதுகாப்பாக அழைத்துவர இந்திய அரசு ஆபரேஷன் சிந்துவை தொடங்கியுள்ளது. இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று, ஈரான் தனது வான்வெளியை திறந்துள்ளது. இதனையடுத்து ஆபரேஷன் சிந்து திட்டத்தின் ஒரு பகுதியாக, ஈரானில் இருந்து மஹான் ஏர் நிறுவனத்தின் தனி விமானங்கள் மூலம் சுமார் 1000 இந்திய மாணவர்கள் திரும்ப அழைத்து வரப்படுகின்றனர்.
இதனையடுத்து ஈரானின் மஷாத்தில் இருந்து 290 இந்திய மாணவர்களை ஏற்றி வந்த முதல் விமானம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) இரவு 11.40 மணியளவில் டெல்லியில் தரையிறங்கியது. அஷ்காபத்தில் இருந்து இந்திய மாணவர்களை ஏற்றி வரும் இரண்டாவது விமானம் நேற்று (சனிக்கிழமை) காலை சுமார் 10 மணியளவில் தரையிறங்கியது. மூன்றாவது விமானம் நேற்று மாலை டெல்லியில் தரையிறங்கியது.
முன்னதாக இந்த நடவடிக்கை குறித்து பேசிய ஈரான் தூதரகத்தின் துணைத் தலைவர் முகமது ஜவாத் ஹொசைனி, “நாங்கள் இந்தியர்களை எங்கள் சொந்த மக்களாகக் கருதுகிறோம். ஈரானின் வான்வெளி மூடப்பட்டுள்ளது, ஆனாலும் இந்தப் பிரச்சினை காரணமாக, இந்திய நாட்டினரின் பாதுகாப்பான பயணத்திற்காக ஈரான் வான்வெளியை திறக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். முதல் விமானம் புதுடெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கும், சனிக்கிழமை மேலும் இரண்டு விமானங்கள் தரையிறங்கும்.” என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


