எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடினர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.
தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்டு சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் அடுத்த 3 செட்களை 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதனையடுத்து விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்களுக்கான விருந்து நிகழ்வில் நடனமாடிய ஜன்னிக் சின்னர் மற்றும் இகா ஸ்வியாடெக் இணைந்து நடனமாடினர். இது தொடர்பான புகைப்படங்களை விம்பிள்டன் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
______________________________________________________________________________________________
ஐதராபாத் அணிக்கு பயிற்சியாளர்
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் நிறைவு பெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசன் முடிவடைந்த சில தினங்களிலேயே அடுத்த சீசனுக்கான பேச்சுகள் எழ ஆரம்பித்து விட்டன. ஒவ்வொரு அணி நிர்வாகமும் அடுத்த சீசனுக்காக தங்களது அணிகளை தற்போதே தயார்படுத்தும் வேளையில் இறங்கி உள்ளன. ஏற்கனவே ராஜஸ்தான் அணியிலிருந்து சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. மற்ற அணிகளும் பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களின் மாற்றங்கள் குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்பட்டன.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வருண் ஆரோன் நியமிக்கப்பட்டுள்ளார். பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த நியூசிலாந்து முன்னாள் வீரர் ஜேம்ஸ் பிராங்க்ளினுக்கு பதிலாக வருண் ஆரோன் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த சீசனிலிருந்து (2026) அவர் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். இந்திய அணிக்காக தலா 9 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள வருண் ஆரோன் அதில் மொத்தம் 29 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அத்துடன் 52 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 44 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
______________________________________________________________________________________________
குடராமெட்ரோவா ஜோடி சாம்பியன்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ரஷியாவின் வெரோனிகா குடராமெட்ரோவா-பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டென்ஸ் ஜோடி, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ-தைவானின் சு-வெய் ஜோடி உடன் மோதியது. இதில் சிறப்பாக ஆடிய குடராமெட்ரோவா ஜோடி 3-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
______________________________________________________________________________________________
ஐ.சி.சி. சிறந்த வீரர், வீராங்கனைகள்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஜூன் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்திருந்தது. அதன்படி ஜூன் மாத சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் மற்றும் ரபடாவும், இலங்கை வீரரான பதும் நிசங்காவும் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் மார்க்ரம் ஜூன் மாத சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் ஹேய்லி மேத்யூஸ் (வெஸ்ட் இண்டீஸ்), தஸ்மின் பிரிட்ஸ் (தென் ஆப்பிரிக்கா) மற்றும் அபி பிளெட்சர் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் சிறந்த வீராங்கனையாக ஹேய்லி மேத்யூஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த விருதை பெறுவது இது 4-வது முறையாகும்.
______________________________________________________________________________________________
இந்திய தடகள வீரர் காயம்
மொனாக்கோவில் தற்போது டயமண்ட் லீக் தடகள தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆடவர் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் பங்கேற்ற அவினாஷ் சாப்ளே தவறி கீழே விழுந்து காயமடைந்தார். வாட்டர் ஜம்ப் பகுதியில் அவர் குதிக்கும்போது கீழே விழுந்தார். இதையடுத்து அவருக்கு மூட்டு, கால், தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவரின் பயிற்சியாளர் அம்ரிஷ் குமார் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “மூட்டுப் பகுதியில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் ஓய்வில் இருக்கிறார். ஓரிரு வாரங்களில் அவர் குணமடைந்து வழக்கமான பயிற்சியில் ஈடுபடுவார்” என்றார்.
______________________________________________________________________________________________
செல்ஸி கோப்பையை வென்றது
பிபா நடத்திய கிளப் உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வந்தன. இறுதிப் போட்டியில் பி.எஸ்.ஜி., செல்ஸி அணிகள் மோதின. இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் 3-0 என செல்ஸி அபார வெற்றி பெற்றது. கோலி பால்மர் 22,30-ஆவது நிமிஷங்களில் கோல் அடிக்க, ஜாவோ பெட்ரோ 43-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து முதல் பாதியில் 3-0 என முன்னிலைப் பெற்றது. இரண்டாம் பாதியில் எவ்வளவு முயன்றும் பி.எஸ்.ஜி. அணியினால் கோல் அடிக்க முடியாமல் சென்றது.
இந்தப் போட்டியில் 67 சதவிகித பந்தினை பி.எஸ்.ஜி. தனது கட்டுக்குள் வைத்திருந்தாலும் கோல் அடிக்க முடியவில்லை என்பது கவனிக்கத்தக்கது. பி.எஸ்.ஜி. வீரர் நெவேஸுக்கு 85-ஆவது நிமிஷத்தில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. செல்ஸி அணி 2-ஆவது முறையாக கிளப் உலகக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. முன்பாக 2021-இல் வென்றிருந்தது. பிபா நடத்திய முதல் கிளப் உலகக் கோப்பை இது என்பது குறிப்பிட்டத்தக்கது. சாம்பியன்ஸ் லீக் மற்றும் இந்த உலகக் கோப்பையிலும் ஆதிக்கம் செலுத்தி வந்த பி.எஸ்.ஜி.க்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது செல்ஸி.
______________________________________________________________________________________________
‘ஜனநாயகன்’ போஸ்டர் ரீ-கிரியேட்
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் வேன் மீது நின்று செல்ஃபி எடுப்பது போன்று வடிவமைத்து வெளியிட்டார்கள். இது நிஜத்தில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பின் போது நடந்தது என்பது நினைவுக் கூரத்தக்கது. ஆனாலும், இந்த ‘ஜனநாயகன்’ போஸ்டருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது ‘ஜனநாயகன்’ போஸ்டர் பாணியில் விம்பிள்டன் நிர்வாகம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற ஜன்னிக் சின்னருக்கு ‘ஜனநாயகன்’ போஸ்டர் பாணியில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். கையில் கோப்பையுடன் ஜன்னிக் சின்னர் செல்ஃபி எடுப்பது போன்று இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை விம்பிள்டன் நிர்வாகம் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
தங்கம் விலை மேலும் உயர்வு
19 Jul 2025சென்னை : தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
மு.க.முத்து வாழ்க்கை வரலாறு
19 Jul 2025தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும் நடிகருமான மு.க.முத்து காலமானார்.
-
மு.க.முத்து மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்
19 Jul 2025சென்னை, மு.க.முத்து மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம்: அமெரிக்காவில் மேல்சிகிச்சை
19 Jul 2025மும்பை, கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு அமெரிக்காவில் மேல்சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
-
மு.க.முத்து உடல்நலக்குறைவால் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
19 Jul 2025சென்னை : “என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அண்ணன் மு.க.முத்து.
-
அகமதாபாத் விமான விபத்து செய்தி: சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கண்டனம்
19 Jul 2025வாஷிங்டன் : ஏர் இந்தியா விமான விபத்து செய்தி விவகாரத்தில் சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காஸாவில் உணவுக்காக காத்திருந்த 50 பேர் பலி
19 Jul 2025காஸா : பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீர் தாக்குதல் நடத்தி அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாக கைது செய்
-
காஷ்மீர், பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான் மீண்டும் விளக்கம்
19 Jul 2025இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மீண்டும் விளக்கமளித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-07-2025.
19 Jul 2025 -
ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறவுள்ள முதுகலை மருத்துவ 'நீட்' தேர்வு: முக்கிய அறிவிப்புகள் வெளியீடு
19 Jul 2025புதுடில்லி, முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் முதுகலை 2025 தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 3-ம் தேதி நடைபெற இருக்கிறது.
-
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
19 Jul 2025சென்னை : தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வரும் 22ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் கூட்டத்தில் புகுந்த கார்: 5 பேர் படுகாயம்
19 Jul 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் கிழக்கு ஹாலிவுட் பகுதியில் கூட்டத்தில் புகுந்த கார் ஏற்படுத்திய விபத்தில் 20 பேர் காயம் அடைந்தனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்தில் இ.பி.எஸ். சிறப்பு பிரார்த்தனை
19 Jul 2025வேளாங்கண்ணி : வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் எடப்பாடி பழனிசாமி மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
19 Jul 2025தருமபுரி : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட 5 ஜெட் விமானங்கள் அதிபர் ட்ரம்ப் கருத்தால் பரபரப்பு
19 Jul 2025வாஷிங்டன், இந்தியா - பாக். மோதலின் போது 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
19 Jul 2025நாகை : கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
-
திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
19 Jul 2025திருப்பதி, திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
19 Jul 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
அய்யப்பனின் பஞ்சலோக சிலையை நிறுவ ஈரோட்டை சேர்ந்தவருக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட் உத்தரவு
19 Jul 2025திருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பனின் பஞ்சலோக சிலையை தனிநபர் நிறுவ கேரள ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை ஆக.25 வரை மேலும் நீட்டித்தது பாகிஸ்தான்
19 Jul 2025இஸ்லாமாபாத் : இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை வரும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி காலை 5.19 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவ
-
இ.பி.எஸ். தானாக பேசவில்லை; யாரோ அவரை பேச வைக்கிறார்கள் : திருமாவளவன் விமர்சனம்
19 Jul 2025சென்னை : 'இ.பி.எஸ்., அவராக பேசவில்லை. அவரை இவ்வாறு யாரோ பேச வைக்கிறார்கள்'' என திருமாவளவன் தெரிவித்தார்.
-
சென்னை திரு.வி.க. நகரில் 6.44 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பள்ளிக்கட்டிடம்: அமைச்சர் அடிக்கல்
19 Jul 2025சென்னை, சென்னை திரு.வி.க.நகரில் ரூ.6.44 கோடியில் பள்ளிக் கட்டிடம்: அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்
-
40 பி. டாலரை தாண்டிய ஏற்றுமதி: அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
19 Jul 2025ஐதராபாத், இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 40 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
'மேக் இன் இந்தியா' வெறும் பேச்சாகவே இருக்கும்: ராகுல்
19 Jul 2025புதுடில்லி :.
-
நீலகிரியில் கனமழை: சுற்றுலா தலங்கள் மூடல்
19 Jul 2025ஊட்டி : கனமழை காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன்பாரஸ்ட், அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது