Idhayam Matrimony

30 மீனவர்கள் கைது எதிரொலி: ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்

வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2025      தமிழகம்
Fisher-Boat 2025-10-09

Source: provided

ராமநாதபுரம் : ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் 30 பேர் கடந்த 3 தினங்களுக்கு முன்பு இரவு தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்கள் நாட்டு எல்லைக்குள் மீன்பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 30 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை விசாரித்த நீதிமன்றம் 30 பேருக்கும் வரும் 23ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து, ராமேசுவரம் மீனவர்கள் 30 பேரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து