முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை ரிங் நடந்த விபத்தில் மாணவி உள்பட 2 பேர் பரிதாப பலி

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      தமிழகம்

 

மதுரை, பிப்.19-

மதுரை ரிங் ரோட்டில் பயங்கர விபத்து  - மாணவி உள்பட 2 பேர் பரிதாப பலி.

மதுரை ரிங்ரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கல்லூரி மாணவி மற்றும் அவரது குடும்ப நண்பர் இருவரும் பரிதாபமாக பலியாகினர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள மேலக்கோட்டையை சேர்ந்தவர் கதிரேச பாண்டியன். அவர் அரசு போக்குவரத்தில் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் ஜெயலட்சுமி. இவர் மதுரை தியாகராஜர் மாலை நேரக்கல்லூரியில் எம்.எஸ்.ஸி 2ம் ஆண்டு படித்து வருகிறார். திருமங்கலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ்காரர் மகன் இதயதுல்லா கான் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இதனை இரு குடும்பத்தினரும் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று ஜெயலட்சுமியை இதயத்துல்லா கான்  கல்லூரியிலிருந்து தனது டூவீலரில் வீடு நோக்கி சென்ற போது ரிங்ரோட்டில் எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் இருவரும் தூக்கி எரியப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்நிலையில் இருவரது உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து அடையாம் தெரியாத வாகனத்தை வலைவீசி தேடிவருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்