முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      தமிழகம்

 

ராமேஸ்வரம், பிப்.21- ராமேஸ்வரம் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை நடுக்கடலில் ஒலிபெருக்கி மூலம் இலங்கை கடற்படையினர் எச்சரிக்கை.

ராமேஸ்வரம் அருகே தமிழக மீனவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துவதையும் சிறைபிடித்து செல்வதையும் இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இலங்கை கடற்படையினர் தாக்குதலுக்கு  நாகை மாவட்டத்தை சேர்ந்த 2 மீனவர்கள் பலியானார்கள். மேலும் கடந்த வாரம் நாகை மீனவர்கள் 112 பேரும், புதுகோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தை சேர்ந்த மீனவர்கள் 24 பேர் உள்பட 136 பேரை இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை மீனவர்கள் பிடித்து சென்றனர். மத்திய அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதால் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

இந்நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் காலை 500 மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் கடலுக்கு சென்றனர். அவர்கள் நள்ளிரவில் 20 படகுகளை சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான 4 ரோந்து கப்பல்கள் மூலம் இலங்கை கடற்படையினர் வருவதை பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது அதிக ஒளிவீசும் விளக்குகளை ராமேஸ்வரம் மீனவர்கள் மீது காட்டி நீங்கள் மீன்பிடித்து கொண்டிருப்பது எங்கள் நாட்டின் எல்லை. இனி மேற்கொண்டு வந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என்று எச்சரித்துவிட்டு சென்றனர். இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்