முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீசாருடன் மோதல்: கே.என். நேரு தப்பியோட்டம்

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

திருச்சி,பிப்.21 - திருச்சி மத்திய சிறை போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, தன்னுடைய சொகுசு காரில் இருந்து கீழே இறங்கி டூவீலரில் ஏறிதப்பியோடிவிட்டார். அவரது சொகுசுகாரை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் தி.மு.க. மாவட்ட செயலாளர் கலைவாணன் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். திருச்சி மத்திய சிறையில் திருவாரூர் மாவட்டம் குத்தாலம் தொகுதி முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.கல்யாணம் அடைக்கப்பட்டுள்ளார். இவரை பார்ப்பதற்காக தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் உள்பட தி.மு.க. வினர் ஒரு காரில் சென்றுள்ளனர். காரை சிறைவாசலில் நிறுத்திவைக்காமல் காரிலேயே சிறைக்குள் அவர்கள் அத்துமீறி சென்றுள்ளனர். கே.என்.நேரு,கலைவாணன் மற்றும் தி.மு.க.வினரை சிறை போலீசார் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நேரு தலைமையில் தி.மு.க. வினர் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக கேன்.என்.நேரு, கலைவாணன் உள்பட காரில் சென்று தகராறு செய்த தி.மு.க.வினர் மீது 8 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக கே.என். நேருவை கைது செய்ய போலீசார் தேடி வந்தனர். இதை பார்த்த நேரு, தாம் சென்ற சொகுசு காரில் இருந்து கீழே இறங்கி ஒரு டூவீலரில் தப்பிவிட்டதாக தெரிகிறது. அதேசமயத்தில் பூண்டி கலைவாணனை போலீசார் கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்