முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோவில் தே.மு.தி.க. வேட்பாளர் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.21 -  சங்கரன்கோவில் இடைத் தேர்தலில், தே.மு.தி.க. சார்பில் கே.முத்துக்குமார் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சங்கரன்கோவிலில் மார்ச் 18-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு பல வாரங்களுக்கு முன்பே அ.தி.மு.க. தனது வேட்பாளராக  முத்துச்செல்வியை அறிவித்தது. பின்னர் தி.மு.க. தனது வேட்பாளராக ஜவகர் சூரியகுமாரை அறிவித்தது. அதேபோல ம.தி.மு.க.வும் தனது வேட்பாளராக டாக்டர் சதன்திருமலைக்குமாரை அறிவித்தது. இந்த நிலையில் தே.மு.தி.க.வின் நிலை தெரியாமல் இருந்து வந்தது. இன்று கூடும் அக்கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தனது கட்சி வேட்பாளரை விஜயகாந்த் அறிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற இருக்கின்ற சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் திருநெல்வேலி மேற்கு மாவட்ட கழகத்தின் துணை செயலாளர் மு. முத்துக்குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார் . திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் பி.இ. பயின்றவர். எம்பிஏ பட்டப் படிப்பு அழகப்பா பல்கலை கழகத்தின் தொலை தூர கல்வி மூலம் முடித்துள்ளார். கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டவர். இவர் சங்கரன்கோவில் நகரத்தில் வசிக்கின்றார் என்று கூறியுள்ளார் விஜயகாந்த். இதைத்தொடர்ந்து சங்கரன்கோவிலில் தற்போது நான்குமுனை போட்டி உருவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்