எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகை. பிப்.23 - தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதும், மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் பறிமுதல் செய்வதும் அவர்களது படகு மற்றும் வலைகளை சேதப்படுத்துவமான அராஜக செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் த மிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் சில மீனவர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
சமீபகாலமாக சிங்கள கடற்படையினர் போல சிங்கள மீனவர்களும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் பலவித அராஜக செயல்கலை மேற்கொண்டு வருகின்றனர். சிங்கள மீனவர்களுக்கு ஆதரவாக சிங்கள கடற்படையினரும் செயல்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக அரசு பலமுறை மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காணும்படி மத்திய அரசுக்கு கடிதம் வாயிலாகவும், நேரிலும் வலியுறுத்தியும் மத்திய அரசு இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணாமல் தமிழக அரசு கோரிக்கை விடுக்கும் போது மட்டும் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அனுப்பி சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவர். பின்னர் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. இனிமேல் தமிழக மீனவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று அறிவிப்பை வெளியிடுவர்.
இதுபோன்ற சம்பவங்கள்தான் தொடர்ந்து நடைபெற்று வருகிறதே தவிர தமிழக மீனவர்கள் உயிருக்கு மத்திய அரசு எந்தவிதமான நிரந்தர பாதுகாப்பையும் அளிக்காமல் அவர்கள் தினந்தோறும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது உயிரை கையில் பிடித்து கொண்டு சென்று வரும் நிலையில்தான் உள்ளனர்.
சிங்கள கடற்படையினர் மற்றும் மீனவர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் தமிழக மீனவர்கலை இத்தாலியை சேர்ந்த கடற்படையினரும் சுட்டுக்கொன்ற சம்பவம் மேலும் தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும், சிங்கள கடற்படையினர் மற்றும் nullமீனவர்களின் தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காண கோரியும் தமிழக மீனவர்கள் மத்திய அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்களையும், வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டாலும் இதுவரை அவர்களது வாழ்வில் விடிவு ஏற்படவில்லை என்றுதான் கூற முடியும்.
இந்த நிலையில் மீண்டும் நாகை மீனவர்கள் மீது சிங்கள மீனவர்கள் மீது சிங்கள மீனவர்கள் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் அராஜக செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
நாகை பீச்சாங்குப்பத்தை சேர்ந்தவர் முட்டப்பன். இவரது மகன் ராஜாராமன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 18ந்தேதி இரவு அதேபகுதியை சேர்ந்த சந்திரபாபு மகன் கோவிந்தராஜ் (47), பக்கிரிசாமி மகன் வடிவேல் (35), ரத்தினவேல் மகன் சக்திவேல் (35), காசிராஜன் மகன் குருநாதன்(25), கந்தசாமி மகன் ராஜசேகரன்(18) மற்றும் சென்னங்குடியை சேர்ந்த வெற்றிவேல் மகன் வையாபுரி(30), மாரிமுத்து மகன் கலைமணி(29) நாகை துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே இவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இவர்களது படகை 5 பிளாஸ்டிக் படகுகளில் வந்த 20க்கும் மேற்பட்ட சிங்கள மீனவர்கள் சுற்றிவளைத்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் வைத்திருந்த பெட்ரோல் குண்டை தமிழக மீனவர்கள் வந்த விசைப்படகுகளில் வீசினர். இதனால் அதிர்ச்சியடைந்த தமிழக மீனவர்கள் சுதாரிப்பதற்குள் சுமார் 15க்கும் மேற்பட்ட சிங்கள மீனவர்கள் தங்கள் படகில் இருந்து தமிழக மீனவர்களின் படகில் குதித்து அவர்களை தாங்கள் வைத்திருந்து சுமார் 3 அடி nullநீளமுள்ள வீச்சரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இதில் படகில் இருந்த தமிழக மீனவர்களில் வடிவேல் என்பவருக்கு வலது கையில் 3 இடங்களிலும், சக்திவேல் என்பவருக்கு தலை மற்றும் உடலின் பல்வேறு இடங்களிலும், வையாபுரி என்பவரின் மூக்கு துண்டிக்கப்பட்டும், இதேபோல் மற்றவர்கள் உடலின் பல்வேறு இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்தனர்.
இதையடுத்து ரத்தம் சொட்ட சொட்ட படுகாயங்களுடன் கரைக்கு திரும்பிய 7 மீனவர்களும் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து படுகாயமடைந்த மீனவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து நாகை டவுன் போலீசிலும், கடலோர காவல்படையினரிடம் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சிங்கள மீனவர்களால் வெடிகுண்டு வீசப்பட்டு அரிவாளால் நாகை மீனவர்கள் வெட்டப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இலங்கை மீனவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் தாக்கியதால் காயமடைந்த மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை நேற்று (புதன்) மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அமைச்சருடன் நகர்மன்ற உறுப்பினர் ஆர்.சந்திரன், ஒன்றியகுழு உறுப்பினர் தங்க.கதிரவன், மீன்வளத்துறை ஆய்வாளர் செளந்தரராஜன், பாலை.செல்வராஜ் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
தங்கம் விலை பவுனுக்கு 1,160 ரூபாய் குறைந்தது
23 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று (ஏப்ரல் 23) 22 காரட் ஆபரணத் தங்கம், பவுனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 53,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.