முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெனாசீர் கொலையில் எனக்கு தொடர்பு இல்லை: முஷாரப்

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,பிப்.23 - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கொலை செய்யப்பட்டதில் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று அந்த நாட்டு முன்னாள் அதிபர் முஷாரப் மறுத்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த பொதுத்தேர்தலின்போது நடந்த பிரசாரத்தின்போது பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவரும் அந்த நாட்டு முன்னாள் பிரதமருமான பெனாசீர் பூட்டோ சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையில் அப்போது பாகிஸ்தான் அதிபராக இருந்த பெர்வஷ் முஷாரப்புக்கு தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்த குற்றச்சாட்டை முஷாரப் மறுத்துள்ளார். பெனாசீர் கொலையில் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. அவரை யார் கொலை செய்தது என்பது பெனாசீர் கணவரான அதிபர் ஜர்தாரிக்கு தெரியும் என்று கூறியுள்ளார். பெனாசீர் வெளிநாட்டில் இருந்தபோது பாகிஸ்தானுக்கு திரும்ப வேண்டாம். உங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று பலமுறை எச்சரித்தேன். அதை பெனாசீர் பொருட்படுத்தவில்லை என்றும் முஷாரப் கூறியுள்ளார். சிந்து மாகாண சட்டசபையில் பேசிய பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக், பெனாசீர் படுகொலையில் முஷாரப்புக்கு தொடர்பு இருக்கிறது என்று கூறியதாக தெரிகிறது. இதற்கு பதில் அளித்த முஷாரப், அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்திற்கு வரும்போது பாதுகாப்பு கொடுப்பது மாகாண அரசுகளின் கடமையாகும். மத்திய அரசு அல்ல என்றும் முஷாரப் பதில் அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்