முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வினருக்காக தயாரிக்கப்பட்ட 3 ஆயிரம் பிரியாணி பொட்டலங்கள்

திங்கட்கிழமை, 21 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருவண்ணாமலை, மார்ச்.22 - திருவண்ணாமலையில் தி.மு.க.வினருக்காக தயாரிக்கப் பட்ட 3 ஆயிரம் பிரியாணி பொட்டலங்களை அதிகாரிகள் கண்டுபிடித்து அதற்கான செலவுத்தொகையினை வேட்பாளர் கணக்கில் சேர்த்துள்ளனர். திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எ.வ.வேலு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். தொண்டர்கள் புடைசூழ உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். இதையொட்டி தி.மு.க.வினருக்கு வழங்குவதற்காக திருவண்ணாமலையில் உள்ள ஒரு பிரபல அசைவ ஓட்டலில் பிரியாணி ஆர்டர் செய்யப் பட்டு இருந்தது. இதையடுத்து மத்தலாங்குளத் தெருவில் உள்ள ஒரு இடத்தில் பிரியாணி தயாரித்து அதை பொட்டலமாக கட்டும் பணி நேற்று காலை முதல் நடந்தது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் பறக்கும் படை தாசில்தார் வேலாயுதம் தலைமையில் போலீசார் அடங்கிய குழு அந்த இடத்துக்கு சென்று விசாரணை செய்தது. தி.மு.க.வினருக்காக பிரியாணி பொட்டலங்கள் தயார் செய்திருப்பதை கண்டுபிடித்த பறக்கும் படையினர் அதற்கான செலவுத் தொகையினை வேட்பாளர் எ.வ.வேலுவின் கணக்கில் சேர்த்திருப்பதாக தெரிகிறது. 3 ஆயிரம் பிரியாணி பொட்டலங்களின் மதிப்பு ரூ.2.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்