முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ஜி வழக்கில் சிதம்பரத்தை சேர்க்கக்கோரி மனுதாக்கல்

சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2012      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, பிப்.25 - 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியம்சாமி மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 2 ஜி. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கைக் குழு குற்றம் சாட்டியதை அடுத்து அப்போதைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆ.ராசா, அவரது முன்னாள் உதவியாளர்கள் சித்தார்த் பெகூரா, சந்தோலியா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் கருணாநிதியின் மகளும் கலைஞர் டி.வி.யின் பங்குதாரருமான கனிமொழி உள்ளிட்ட மேலும் சிலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கனிமொழி உள்ளிட்ட சிலர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். ஆ.ராசா உள்ளிட்ட சிலர் இன்னும் திஹார் சிறையிலேயே உள்ளனர். 

இந்த ஊழல் வழக்கில் தற்போது மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்றும், எனவே அவரையும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்றும் கோரி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில்  ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம்சாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி, சுப்பிரமணியசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணிய சாமி நேற்று மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். கடந்த 2008 ம் ஆண்டு 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டபோது மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். 2 ஜி. ஒதுக்கீடு தொடர்பான விலை நிர்ணயம் செய்ததில் அப்போதைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு உள்ளதைப் போலவே அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் சம அளவில் பங்கு இருக்கிறது என்றும் எனவே இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை சேர்க்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். ப.சிதம்பரத்தை கலந்து ஆலோசித்த பிறகே 2 ஜி. ஒதுக்கீடு தொடர்பான விலை நிர்ணயத்தை ஆ.ராசா முடிவு செய்திருக்கிறார். எனவே ப.சிதம்பரத்திற்கும் இந்த ஒதுக்கீட்டில் பங்களிப்பு இருந்துள்ளது. எனவேதான் அவரையும் இந்த வழக்கில் சேர்க்க கோருவதாக சுப்பிரமணிய சாமி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தனது தீர்ப்பில் சிதம்பரம் ஊழல் செய்ததற்கான அல்லது சட்ட விரோதமாக செயல்பட்டதற்கான ஆதாரங்கள் எதையும் சுப்பிரமணியசாமி தாக்கல் செய்யவில்லை எனக்கூறி அவரது மனுவை கடந்த 4 ம் தேதி தள்ளுபடி செய்தது என்பது  குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago