முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய விண்வெளி விஞ்ஞானி ராஜினாமா

சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, பிப். 25 - இந்திய விண்வெளி கமிஷனின் முன்னணி விஞ்ஞானியான ரோதம் நரசிம்ஹா பதவி விலகியுள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை அவர் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அனுப்பி வைத்தார். இஸ்ரோவின் சர்ச்சைக்குரிய ஆண்ட்ரிக்ஸ் தேவாஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உட்பட 4 பேர் அரசு பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த அணுகுமுறையை விஞ்ஞானிகள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் விஞ்ஞானிகளை அரசு நடத்தும் விதத்துக்கு அதிருப்தி தெரிவிக்கும் வகையிலேயே நரசிம்ஹா பதவி விலகியிருப்பதாக கூறப்படுகிறது. 

பதவி விலகியுள்ள ரோதம் நரசிம்ஹா, இந்தியாவின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிபுணராவார். பிரதமர் தலைமையிலான விண்வெளி கழகத்தின் உறுப்பினராக உள்ள அவர், தனது அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விண்வெளி துறையில் பணியாற்றிய நரசிம்ஹா, சந்திராயன் 1 விண்கலம், பி.எஸ்.எல்.வி. , ஏ.எஸ்.எல்.வி செயற்கை கோள் ஆகியவற்றை வெற்றிகரமாக செலுத்தியதில் முக்கிய பங்கும் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்