முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்கவுன்டர் சம்பவம்: மாஜிஸ்திரேட் 3-வது நாளாக விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப். 26 - போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொள்ளப்பட்ட 5 கொள்ளையர்கள் குறித்து பெண் மாஜிஸ்திரரேட் கீதாராணி நேற்று(25 -ந் தேதி) 3 வது நாளாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டார்.இது குறித்த விபரம் வருமாறு:- சென்னையில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 கொள்ளையர்கள் யார்​ யார்? என்பதை அறிய பீகார் மாநில அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக பீகார் மாநில தலைமை செயலாளர், டி.ஜி.பி. மற்றும் உயர் அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர். தமிழக அதிகாரிகளுடன் அவர்கள் விரிவான ஆலோசனை நடத்த உள்ளனர்.

இதற்கிடையே சென்னை பெருநகர 14​வது மாஜிஸ்திரேட் கீதாராணி, 5 கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை முதல் விசாரணை நடத்தி வருகிறார். நேற்று 3​வது நாளாக அவரது விசாரணை nullநீடித்தது. என்கவுண்டரில் ஈடுபட்ட போலீசார், வீட்டு உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் மாஜிஸ்திரேட் கீதாராணி விசாரித்தார்.

சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட அவர் பிறகு அரசு மருத்துவமனைக்கு சென்று கொள்ளையர்களின் உடல்களையும் பார்வையிட்டார். அதன் அடிப்படையில் அவர் குறிப்பு எழுதி கொடுத்தார். இதையடுத்து நேற்று (சனிக்கிழமை) 5 கொள்ளையர்களின் உடல் பரிசோதனை நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்