எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.- 27 - சென்னைநகரில் பல்வேறு குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்ட 4 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்து கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். பள்ளிகரனை. எம்.ஜி.ஆர் நகர். அன்னை இந்திராகாந்தி தெருவை சேர்ந்த சுகுமார் (25) மற்றும் பள்ளிகரணை விவேகானந்தர் தெருவை சேர்ந்த குமார் (27) ஆகியோர் கடந்த பிப்-5 காலை 09.00 மணிக்கு வேளச்சேசரி மெயின் ரோடு ஆயில்மில் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்று கொண்டிருந்தவரை வழிமறித்து கத்தியை காட்டி அவரிடமிருந்து பணம் மற்றும் கைகடிகாரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த ஜன-27 அன்று பள்ளிகரணை சுண்ணாம்பு கொளத்தூரில் உள்ள நாரயணபுரம் ஏரிகரையில் சுகுமாரின் கள்ளகாதலியான சரளா என்ற பெண்ணை கொலை செய்து ஏரியில் வீசிய வழக்கிலும். கடந்த பிப்-4 அன்று மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தவரிடம் கத்தியை காட்டி பணம் வாட்ச் போன்றவற்றை வழிபறி செய்ததோடு அவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த வழக்கிலும் சம்பந்தபட்டுள்ளார்கள். தொடர்ந்து பொது மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் கொலை. கொள்ளை வழிபறி போன்று பொது மக்கள் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வந்த பள்ளிகரணையை சேர்ந்த சுகு (எ) சுகுமார் மற்றும் குமார் ஆகியோரை காவல் இணை ஆணையாளர் தெற்கு மண்டலம் பரிந்துரையின் பேரில் காவல் ஆணையாளர் திரிபாதி குண்டர் சட்டத்தின் கீழ் உத்தரவிட்டதின் பேரில் நேற்று குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோல் ஆதம்பாக்கம் மண்ணடியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (எ) கோழிக்கால் ராஜேஷ் (27) என்பவர் கடந்த ஜன-9 அன்று காலை 09.30 மணிக்கு என்.ஜி.ஓ. காலனி பஸ் நிலையம் அருகில் நாகராஜன் என்பவரை மடக்கி கத்தியை காட்டி பணத்தை பறித்ததுடன் அவரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் -13 அன்று 9.30 மணிக்கு பாலகிருஷ்ணபுரம் சந்திரசேகர் கல்யாண மண்டபம் அருகில் வேலு என்பவரை தனது நண்பர்களுடன் வழிமடக்கி உருட்டு கட்டையால் தாக்கி காயபடுத்தி கொலை மிரட்டல் விடுத்த வழக்கிலும். இதேபோல் பிப்-24 அன்று 10 மணிக்கு ஆதம்பாக்கம் மண்ணடியம்மன் கோவில் தெருவில் பால் ஆப்ரகாம் என்பவரை வழிமடக்கி உருட்டு கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த வழக்கிலும். கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆதம்பாக்கம் மஸ்தான் கோவில் தெருவில் பால் இன்பராஜ் என்பவரை வழிமடக்கி உருட்டு கட்டையால் தாக்கி காயம் ஏற்படுத்தியதுடன் கொலை மிரட்டல் விடுத்த வழக்கிலும் சம்பந்தபட்டுள்ளார். தொடர்ந்து பொது மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் வழிபறி மற்றும் ரவுடித்தனங்களில் ஈடுபட்டு போது மக்கள் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வந்த ஆதம்பாக்கத்தை சேர்ந்த ராஜேஷ் (எ) கோழிக்கால் ராஜேஷ் என்பவரை காவல் இணை ஆணையாளர் தெற்கு மண்டலம் பரிந்துரையின் பேரில் காவல் ஆணையாளர் திரிபாதி குண்டர் சட்டத்தின் கீழ் உத்தரவிட்டதின் பேரில் நேற்று குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல் அசோக்நகர். புதூர் 2-வது தெருவை சேர்ந்தவர் தயாளன் (39) கடந்த பிப்-5 அன்று புதூர் 3-வது அவன்யு மற்றும் 8-வது தெரு சந்திப்பில் போதை தரும் கஞ்சா பொட்டலங்களை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த போலீசை கண்டதும் தப்பி ஓடியுள்ளார். அவரை விரட்டி பிடித்து கைது செய்து சோதனையிட்டதில் அவரிடமிருந்து மொத்தம் 1100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர் ஏற்கனவே கடந்த பிப்-3 அன்று புதூர் 1-வது தெரு மற்றும் 2-வது தெரு சந்திப்பில் கஞ்சா விற்பனை செய்த கொண்டிருந்தபோது சுமார் 1100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார். இதேபோல் கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அசோக்நகர் மற்றும் புஜதூர் பகுதிகளில் கஞ்சா பொட்டலங்களை விற்றதாக இரண்டு வழக்குகளில் சம்பந்தபட்டுள்ளார்.
தொடர்ந்து சமூகத்தை சீரழிக்கும் வண்ணம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த மேற்படி தயாளனை. தெற்கு மண்டலம் காவல் இணை ஆணையாளரின் பரிந்துரையின் பேரில் சென்னை நகர காவல் ஆணையாளர். திரிபாதி குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டதின் பேரில் நேற்று குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். காவல் ஆணையாளரின் உத்தரவுப்படி தெற்கு மண்டலத்தில் நேற்று முன்தினம் பிப்-5 காலை முதல் விடிய விடிய குற்ற தடுப்பு நடவழக்கைகள் மற்றும் வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேற்படி தேடுதல் வேட்டையின்போது சந்தேகத்திற்கிடமாக திரிந்த 676 நபர்கள் தடுப்பு நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர். சிறு சிறு பிரச்சனைகள் செய்த 69 நபர்கள் கைது செய்யப்பட்டு சென்னை மாநகர காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாகன தணிக்கையில் 5117 வாகனகள் சோதனையிடப்பட்டன. 43 வாகனகள் சரியான ஆவணங்கள் இல்லாமைக்காக பறிமுதல் செய்யப்பட்டது. குடிபோதையில் வாகனம் ஒட்டி வந்த 2 நபர்களின் வாகனகள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
தேர்தல் விதிமீறல் புகார்: நீலகிரியில் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு
29 Mar 2024நீலகிரி, பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு: ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை
29 Mar 2024புது டெல்லி, டெல்லியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பில் கேட்ஸ் நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.