எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலூர், பிப். - 27 - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் மேலூரில் ரூ. 6.5 லட்சம் பரிசு தொகை கொண்ட மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் மேலூர் ஆர்.சாமி எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் நடைபெற்றது. இதனை எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம்,சாமி , தமிழரசன், ஆகியோர் துவக்கி வைத்தனர். மேலூரில் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்திற்கு மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். தமிழரசன் எம்.எல்.ஏ. கருப்பையா எம்.எல்.ஏ. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மராஜா, உசிலம்பட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்த பந்தயம் பெரியமாடு, நடுமாடு, சின்னமாடு ஜோடி, பூஞ்சிட்டு ஜோடி என நான்கு பிரிவுகளாக நடந்தது. பெரியமாடு பிரிவில் 16 ஜோடிகள் கலந்துகொண்டன. இந்த மாட்டிற்கான பந்தய எல்கை மேலூர் சிவகங்கை சாலை மலம்பட்டியிலிருந்து கோட்டநத்தம்பட்டி வரை நடைபெற்றது. இதில் முதல் பரிசை பாண்டிகோவில் பாண்டிச்சாமி மாடு ரூ.ஒருலட்சத்து எட்டை வென்றது. இரண்டாவது பரிசை கல்லணை விஸ்வா ரவிச்சந்திரன் மாடு ரூ.90 ஆயிரம் வென்றது. 3 வது பரிசை கடம்பூர் இளைய ஜமீன்தார் கருணாகர ராஜா மாடு ரூ.80 ஆயிரம் வென்றது. இந்த பந்தயத்தில் கொடி பரிசை கணபதி ரூ.5004பெற்றார். எல்கைப் பரிசை ராமச்சந்திரன்ரூ.5004 ஐ பெற்றார். இரண்டாவதாக நடைபெற்ற நடுமாடு போட்டியில் எல்கை பந்தயத்திடலில் இருந்து ஒத்தப்பட்டி வரை நடைபெற்றது. இதில் 31 ஜோடிகள் கலந்துகொண்டன. முதல் பரிசை மதுரை ஆனையூர் சரவணன் மாடு ரூ,70,002 ஐ வென்றது. இரண்டாவது பரிசை தேனி உப்பார்பட்டியை சேர்ந்த கெளசிக் மகாதேவ் மாடு ரூ.60,003 ஐ வென்றது. 3வது பரிசை மேலூர்எஸ்.வி.பி. முருகன் மாடு ரூ.50,004 ஐ வென்றது. இந்த போட்டியின் கொடிப்பரிசை சசி ரூ.4005 ஐ வென்றார். எல்கைப்பரிசான ரூ.4005ஐயும் அவரே வென்றார். மூன்றாவது போட்டியாக கரிச்சான் பிரிவில் 48 ஜோடிகளும் கலந்து கொண்டன. ஜோடிகள் அதிகமாக உள்ள காரணத்தினால் மாட்டின் உரிமையாளர்களிடம் கூறி இதனை 2 பிரிவுகளாக்கினர். முதல் செட்டில் 24 ஜோடிகள் கலந்துகொண்டன. இந்த போட்டிக்கான எல்கை பந்தயத்திடலிருந்து வண்ணாம்பாறைபட்டி வரை நடைபெற்றது. இதில் முதலாவதாக கடம்பூர் இளைய ஜமீன்தார் கருணாகர ராஜா ரூ.20,005 ஐ வென்றார். இரண்டாவது பரிசை மதுரை பரவையைச் சேர்ந்த சீலைக்காரி ரூ.15,006 ஐ வென்றார். 3 வது பரிசை மேலூர் எட்டிமங்கலத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார் ரூ.10,007 ஐ வென்றார். இந்த போட்டிக்கான கொடிப்பரிசை ரூ.1751 ஐ பாக்கியம் பெற்றார். எல்கை பரிசான ரூ.1751 ஐ சக்கரபாணி பெற்றார். இதே ஜோடியின் 2வது செட்டில் முதல் பரிசை மேலூர் எட்டிமங்கலம் ஹரிதாஸ் ரூ.20,005 ஐ வென்றார். இரண்டாவது பரிசை கே.கே.பட்டியை சேர்ந்த பொன்னையா தேவர் ரூ.15,006ஐ வென்றார். 3 வது பரிசை மதுரைபாண்டி கோவில் பாண்டிச்சாமி ரூ.10,007 ஐ வென்றார். இந்த போட்டிக்கான கொடிப்பரிசை ரூ.1751 ஐ கணபதி பெற்றார். எல்கை பரிசான ரூ.1751 ஐயும் அவரே பெற்றார். நான்காவதாக நடைபெற்ற பூஞ்சிட்டு பிரிவில் 39 ஜோடிகள் கலந்து கொண்டன. இந்த போட்டி பந்தயத்திடலிருந்து கணபதிபுரம் வரை நடைபெற்றது. முதல் பரிசை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி புதுப்பட்டியைச் சேர்ந்த கே.ஏ.அம்பாள் ரூ.35,001 ஐ வென்றார். இரண்டாவது பரிசாக மேலூர் அதிமுக கவுன்சிலர் ஆர்.கே சந்திரன் ரூ.25,002 ஐ வென்றார். 3வது பரிசை போடி சின்னத்தேவர் நினைவாக பிரபு ரூ.15,003 ஐ வென்றார். இந்த போட்டிக்கான கொடிப்பரிசை கோபி ரூ.3501 ஐ பெற்றார். எல்கைப்பரிசான ரூ.3501 ஐ கணபதி பெற்றார். இந்த போட்டியில் இரண்டாவதாக வந்து கொடியை தவற விட்ட காரணத்திநால் வெற்றி வாய்ப்பை இழந்த கூடலூர் விசித்குமாருக்கு ஆறுதல் பரிசாக ரூ.10,000 ஐ போட்டி நடத்துனரான ஆர்.சாமி எம்.எல்.ஏ. வழங்கினார். இந்த போட்டியை காண்பதற்காக தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், மதுரை மட்டும் மேலூர் சுற்றுப்பகுதிகளிலிருந்து சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சாலை இருமருங்கிலும் பந்தயத்திடலில் இருந்து எல்கை வரை மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. இந்த பந்தயத்தை காண்பதற்காக வந்த ரசிகர்கள் கூறியதாவது. ஆண்டுதோறும் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மேலூர் சட்டமன்ற தொகுதி ஆர்.சாமி எம்.எல்.ஏ பல லட்சம் மதிப்பிலான இந்த மாட்டுவண்டி பந்தயத்தை வெகு சீரும் சிறப்புமாக நடத்திக் கொண்டு வருகிறார் என்று தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு மேலூர் யூனியன் செல்வராஜ், சேர்மன்கள் மேலூர் சரவணன், கொட்டாம்பட்டி வெற்றி செழியன், வள்ளாளபட்டி உமாபதி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ஜபார், மேலூர் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பாலகிருஷ்ணன், அம்மா பேரவை நகர் செயலாளர் சாகுல் ஹமீது , கொட்டாம் பட்டி துனை சேர்மன் குலோத்துங்கன், சென்னகரம்பட்டி எஸ்.எஸ். துரை, சூரக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் துரைஅண்ணா, ஏ.வலையபட்டி தலைவர் பெரியபுல்லான் என்ற செல்வம் மற்றும் மேலூர் நகராட்சி, ஊராட்சி, கொட்டாம்பட்டி ஊராட்சி, அ.வள்ளாலபட்டி பேரூராட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.இந்த போட்டிக்கான பரிசுத் தொகைகளை காஞ்சிவனம் சுவாமி திடலில் மாட்டின் உரிமையாளர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.