முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுத்துறை வங்கிகள் ஸ்டிரைக் ஏ.டி.எம். சேவைகள் பாதிக்கும்

செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, பிப். - 28 - நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள் கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் ஸ்டிரைக்கில் ஈடுபடுவதால் வங்கி பணிகள், ஏ.டி.எம். சேவை உள்ளிட்டவை பாதிப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8 தொழிற்சங்கங்களை சேர்ந்த வங்கி பணியாளர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். வங்கிகளில் நிலுவையில் உள்ள வாராக்கடன்களை வசூலிக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கி பணிகளில் அவுட்சோர்சிங் முறை கூடாது. வங்கிகள் சீரமைப்பு தொடர்பான காந்தல்வால் கமிட்டியின் பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஸ்டிரைக் நடக்கிறது. இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக வங்கி பணிகள், ஏ.டி.எம். சேவை, காசோலை மாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்